ரூ. 300 கோடி வசூலை நோக்கி நகரும் மகாவதார் நரசிம்மா | 'டியூட்' தீபாவளி ரிலீஸ் என மீண்டும் அறிவிப்பு : ஆக., 28ல் முதல் பாடல் | இந்த நடிகை என்னுடன் நடிப்பதற்காக பூஜை, பிரார்த்தனை செய்தேன் : அனுபமா பரமேஸ்வரன் | விஜய் பேச மாட்டார்... அஜித் பேசவே மாட்டார் : ஏ.ஆர் முருகதாஸ் | கேரள அரசு போக்குவரத்து ... மலரும் நினைவுகளில் மோகன்லால் | கைதி 2 படத்திற்கான கால்ஷீட்டை சுந்தர்.சிக்கு கொடுத்த கார்த்தி | அட்ரஸ் இல்லாத லெட்டருருக்கு நான் ஏன் பதில் போடனும்? விஜய்யின் பேச்சுக்கு கமல் பதில் | கார்த்தியின் படத்தில் வில்லனாக நடிக்கும் ஆதி | விஜயகாந்த் பற்றி விஜய்யின் 'அண்ணன்' பேச்சு : மகன் சண்முக பாண்டியன் சொன்ன பதில் | 300 கோடி வசூல் கடந்தும் நஷ்டத்தை சந்திக்கும் 'வார் 2' |
சின்னத்திரை நடிகையான ஸ்ரீநிதியும், நக்ஷத்திராவும் நல்ல தோழிகளாக இருந்து வந்தனர். இடையில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஸ்ரீநிதி நக்ஷத்திராவை பற்றியும் அவரது கணவர் பற்றியும் ஏதேதோ சர்ச்சைகளை கிளப்பினார். இதனையடுத்து மன அழுத்தத்திற்காக சிகிச்சையும் பெற்றார். மற்றொருபுறம் நக்ஷத்திரா அவரது கணவர் விஸ்வாவுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை தான் வாழ்ந்து வருகிறார். தற்போது கர்ப்பமாக இருக்கும் நக்ஷத்திராவுக்கு கர்ப்பகாலத்தில் நிகழும் வளைகாப்பு சடங்கு நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்ட ஸ்ரீநிதி தோழியை வாழ்த்தி நலங்கு வைத்துள்ளார். மேலும், விஸ்வாவுடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்துள்ளார். அந்த புகைப்படங்களானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.