தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து திருமணங்கள்: கெட்டிமேள சத்தம் கேட்கப்போகுது | மேக்கப் குறித்து சரோஜாதேவி சொன்னது: இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் புதுதகவல் | என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! |
இயக்குனர் வெற்றிமாறன் இப்போது நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் உருவாகியுள்ள 'விடுதலை' படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் வரும் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் ரிலீஸாக உள்ளது. அதன்பின் சூர்யாவின் வாடிவாசல், தனுஷின் வட சென்னை 2 ஆகிய படங்கள் லைனில் உள்ளன.
இந்நிலையில் வெற்றிமாறன் தன் உதவி இயக்குனர்கள் 25 நபர்களுக்கு செங்கல்பட்டு மாவட்டம் உத்திரமேரூர் அருகே ஆளுக்கு ஒரு கிரவுண்ட் நிலம் வாங்கி கொடுத்துள்ளாராம். இந்த இடத்தில் வீடு கட்டிக் கொள்ளவோ, அல்லது சிறு அளவில் விவசாயமோ செய்ய சொல்லி உள்ளாராம். அதேசமயம் எக்காரணத்தை கொண்டும் அந்த இடத்தை விற்க கூடாது என கண்டிப்பான முறையில் கூறி உள்ளார் வெற்றிமாறன்.
இது குறித்து செய்திகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. நெட்டிசன்கள் வெற்றிமாறனை பாராட்டி வருகின்றனர்.