வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் | மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி | எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் | பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் |

இயக்குனர் வெற்றிமாறன் இப்போது நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் உருவாகியுள்ள 'விடுதலை' படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் வரும் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் ரிலீஸாக உள்ளது. அதன்பின் சூர்யாவின் வாடிவாசல், தனுஷின் வட சென்னை 2 ஆகிய படங்கள் லைனில் உள்ளன.
இந்நிலையில் வெற்றிமாறன் தன் உதவி இயக்குனர்கள் 25 நபர்களுக்கு செங்கல்பட்டு மாவட்டம் உத்திரமேரூர் அருகே ஆளுக்கு ஒரு கிரவுண்ட் நிலம் வாங்கி கொடுத்துள்ளாராம். இந்த இடத்தில் வீடு கட்டிக் கொள்ளவோ, அல்லது சிறு அளவில் விவசாயமோ செய்ய சொல்லி உள்ளாராம். அதேசமயம் எக்காரணத்தை கொண்டும் அந்த இடத்தை விற்க கூடாது என கண்டிப்பான முறையில் கூறி உள்ளார் வெற்றிமாறன்.
இது குறித்து செய்திகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. நெட்டிசன்கள் வெற்றிமாறனை பாராட்டி வருகின்றனர்.




