காந்தாரா சாப்டர் 1 ரிலீஸ் தள்ளிவைப்பா... : ரிஷப் ஷெட்டி பதில் | குத்துப்பாடலில் சர்ச்சையான வரிகளை நீக்க சொன்ன பவன் கல்யாண் ; மரகதமணி தகவல் | பண மோசடி வழக்கில் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளர்களின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | ஏகப்பட்ட நிபந்தனைகள் விதித்த தீபிகா படுகோனே : வெளியேறவில்லை.. வெளியேற்றப்பட்டார் | போலீஸ் பாதுகாப்பை மீறி சல்மான் கான் வீட்டுக்கு செல்ல முயன்ற பெண் கைது | மைசூர் சாண்டல் சோப் தூதராக தமன்னா நியமனம் : வலுக்கும் எதிர்ப்பு | ரவி மோகன், ஆர்த்திக்கு கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு | 24 ஆண்டுகளுக்கு பின் தமிழில் ரவீனா டாண்டன் | முன்னாள் மனைவியிடம் மன்னிப்பு கேட்ட ஏஆர் ரஹ்மான் | நான் நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண் : பாடகி கெனிஷா பதிவு |
துணிவு படத்தை அடுத்து அஜித் நடிக்கும் 62வது படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை மகிழ்திருமேனி இயக்கப் போகிறார். இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று கடந்த ஒரு மாதகாலமாகவே அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் அஜித்குமாரின் தந்தை கடந்தவாரம் மரணம் அடைந்ததால் அஜித் 62 வது படத்தின் அறிவிப்பு தள்ளிப் போவது தெரியவந்தது.
இந்த நிலையில் லைகா நிறுவனத்தின் தமிழ் குமரன் கூறுகையில், ஏகே 62 படத்தின் நல்ல செய்தி அடுத்த மாதம் வருமென்று தெரிவித்துள்ளார். இதை அடுத்து அஜித் 62 ஆவது படத்தின் அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டு, மே மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கும் என்பது உறுதியாகி இருக்கிறது. இப்படத்தின் படப்படிப்பை முடித்ததும் தனது இரண்டாவது கட்ட உலக பைக் சுற்றுப்பயணத்தை தொடங்குவதற்கு திட்டமிட்டுள்ளார் அஜித்குமார்.