ரீ-ரிலீஸாகும் ‛தேவர் மகன்' பட பணிகள் : சிறுவன் பேசிய ‛கட்டபொம்மன்' வசனத்தால் அசந்து போன கமல் | பிரபாஸின் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது! | இளையராஜாவின் காப்புரிமை வழக்கு : சோனி நிறுவனம் வருமானம் தாக்கல்... அடுத்து ‛டியூட்' படத்திற்கும் சிக்கல் | அக்டோபர் 31ம் தேதி 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் ஆங்கில பதிப்பு வெளியாகிறது! | டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா | ஹீரோயின் இல்லாமல் தேங்கி நிற்கும் கவின் படம்! | ‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம் | கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் குறித்து அப்டேட் இதோ! |
வெண்ணிலா கபடி குழு படத்தில் அறிமுகமானவர் விஷ்ணு விஷால். அதன்பிறகு துரோகி, ராட்சசன், கட்டா குஸ்தி உள்பட பல படங்களில் நடித்த தற்போது ஐஸ்வர்யா ரஜினி இயக்கி வரும் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார். தனது முதல் மனைவி உடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அவரை விவாகரத்து பெற்ற விஷ்ணு விஷால் பின்னர் விளையாட்டு வீராங்கனை ஜூவாலா கட்டாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் விஷ்ணு விஷால் சமூக வலைதளத்தில் பகிர்ந்த பதிவு ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. அந்த பதிவில், ‛‛பரவாயில்லை, நான் மீண்டும் முயற்சி செய்தேன், தோற்றுவிட்டேன். மீண்டும் கற்றுக் கொண்டுள்ளேன்.என் தோல்வியோ என் தவறோ கிடையாது. அது ஒரு துரோகம் மற்றும் ஏமாற்றம்'' என குறிப்பிட்டார். ஆனால் பின்னர் அந்த பதிவை நீக்கிவிட்டார்.
இதையடுத்து இரண்டாவது மனைவியான ஜுவாலாவிற்கும் விஷ்ணு விஷாலுக்கும் பிரச்னை, இவரையும் பிரிகிறீர்களா விஷ்ணு என பலரும் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ''எனது பதிவு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அது என் வாழ்க்கை சம்பந்தப்பட்டது அல்ல, தொழில் சம்பந்தப்பட்டது. ஒருவருக்கு நாம் கொடுக்கும் கிப்ட் நம்பிக்கையே. ஆனால், தோற்கும்போது நாம் நம்மையே குறை கூறுகிறோம். அப்படி இருக்க தேவையில்லை. இதை தான் சொல்ல வந்தேன்'' என விளக்கமளித்துள்ளார் விஷ்ணு விஷால்.