47 வருடங்களுக்குப் பிறகு கூட்டணி : எதையும் 'ஷேர்' செய்யாத ரஜினிகாந்த் | தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்: புதிய தலைவராகும் ஜி.கே.எம். தமிழ்குமரன் | மீண்டும் ‛தி ராஜா சாப்' பட நிறுவனத்துடன் இணையும் பிரபாஸ்! | சிகிச்சைக்கு பிறகு அடியோடு மாறி விட்டேன்! -‛பாகுபலி' வில்லன் ராணா | பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிடம் 10 கோடி கேட்டு மிரட்டல்! | ‛டிராகன்-2' அப்டேட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன்- அஸ்வத் மாரிமுத்து! | 70வது பிலிம்பேர் விருதுகள் - அதிக விருதுகளை வென்ற 'அமரன்' | இது கமல் ரஜினி பட கணக்கு | சிறிய பட்ஜெட் படத்தை இயக்கும் சமுத்திரக்கனி! | ‛கல்கி 2898 ஏ.டி' படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! |

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அடுத்ததாக தெலுங்கில் வெளியாக இருக்கும் படம் தசரா. நானி கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தை ஸ்ரீகாந்த் ஒத்தெல்லா இயக்கியுள்ளார். இந்த படம் கேஜிஎப் பாணியில் நிலக்கரி சுரங்க பின்னணியில் நடைபெறும் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் 30 ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் கீர்த்தி சுரேஷ்.
அந்த வகையில் ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “மகாநதி படத்தில் நடித்தபோது ஏற்பட்ட ஒரு அதிர்வு, எனக்கு இந்த படத்தில் நடிக்கும்போது மீண்டும் ஏற்பட்டது. இந்த படத்தில் தெலுங்கானாவை சேர்ந்த பெண்ணாக நடித்துள்ளேன். படத்தில் வித்தியாசமாக தெலுங்கு பாஷை பேச வேண்டி இருந்தது. இதற்காக எனக்கு ஆரம்பத்திலேயே தெலுங்கு பேராசிரியர் ஒருவரும் துணை இயக்குனர் ஒருவரும் பேசுவதற்கு பயிற்சி அளித்தார்கள். அதனால் இந்த படத்தில் என்னுடைய காட்சிகளுக்கான டப்பிங்கை ஆறு நாட்களிலேயே முடித்து விட்டேன். வழக்கமாக என்னுடைய படங்களுக்கு இதை விட இன்னும் மூன்று நாட்கள் அதிகமாக தான் ஆகும்” என்று கூறியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.