கோயில் பொக்கிஷ பின்னணியில் உருவாகும் புராண திரில்லர் ‛நாகபந்தம்' | இயக்குனரை தேர்ந்தெடுத்த கதை | ஐஸ்வர்யா ராஜேஷின் தெலுங்கு படம் அறிவிப்பு | வெளியீட்டிற்கு முன்பே லாபம் சம்பாதிக்கும் 'ஜனநாயகன்' | விஷால் 8 கோடி மோசடி குறித்து அரசு அறிக்கை: தயாரிப்பாளர் சங்க தலைவர் தகவல் | பிளாஷ்பேக்: முரளி இரண்டு வேடங்களில் நடித்த படம் | பிளாஷ்பேக்: தமிழில் படமான நோபல் பரிசு எழுத்தாளரின் கதை | பீடி, சுருட்டு குடிக்க பயிற்சி எடுத்த கீதா கைலாசம் | தயாரிப்பாளர் ஆனார் ஆண்ட்ரியா : மாஸ்க் படத்தில் வில்லத்தனமான கேரக்டர் | பிரித்விராஜூக்கு ஜோடியாக நடிக்க ஆசை ; பாக்யஸ்ரீ போர்ஸ் |

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அடுத்ததாக தெலுங்கில் வெளியாக இருக்கும் படம் தசரா. நானி கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தை ஸ்ரீகாந்த் ஒத்தெல்லா இயக்கியுள்ளார். இந்த படம் கேஜிஎப் பாணியில் நிலக்கரி சுரங்க பின்னணியில் நடைபெறும் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் 30 ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் கீர்த்தி சுரேஷ்.
அந்த வகையில் ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “மகாநதி படத்தில் நடித்தபோது ஏற்பட்ட ஒரு அதிர்வு, எனக்கு இந்த படத்தில் நடிக்கும்போது மீண்டும் ஏற்பட்டது. இந்த படத்தில் தெலுங்கானாவை சேர்ந்த பெண்ணாக நடித்துள்ளேன். படத்தில் வித்தியாசமாக தெலுங்கு பாஷை பேச வேண்டி இருந்தது. இதற்காக எனக்கு ஆரம்பத்திலேயே தெலுங்கு பேராசிரியர் ஒருவரும் துணை இயக்குனர் ஒருவரும் பேசுவதற்கு பயிற்சி அளித்தார்கள். அதனால் இந்த படத்தில் என்னுடைய காட்சிகளுக்கான டப்பிங்கை ஆறு நாட்களிலேயே முடித்து விட்டேன். வழக்கமாக என்னுடைய படங்களுக்கு இதை விட இன்னும் மூன்று நாட்கள் அதிகமாக தான் ஆகும்” என்று கூறியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.




