வித்தைக்காரன் படத்தின் டப்பிங் பணிகளை துவங்கிய சதீஷ் | பழம்பெரும் ஹிந்தி நடிகை சுலோச்சனா லட்கர் மறைவு : பிரதமர் இரங்கல் | தமிழ் சினிமாவில் மீண்டும் த்ரிஷா அலை | ஜுன் 9ம் தேதி போட்டியில் 'போர் தொழில், டக்கர்' | பானி பூரி: தமிழில் தயாராகும் புதிய வெப் தொடர் | சினிமா ஆகிறது முதல் போஸ்ட்மேன் கதை | பிம்பிளிக்கி பிலாப்பி: பிரான்ஸ் நாட்டின் லாட்டரி பின்னணியில் உருவாகும் படம் | 24 ஆண்டுகளுக்கு பிறகு படம் இயக்கும் பாரதி கணேஷ் | 2018 படத்தில் முதலில் நடிக்க மறுத்தேன் : டொவினோ தாமஸ் | எனக்கு கேன்சர் என்று சொல்லவில்லை : சிரஞ்சீவி விளக்கம் |
மாஸ்டர் படத்திற்கு பின் நடிகர் விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ'. திரிஷா, பிரியா ஆனந்த், கவுதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் சில நாட்களுக்கு முன் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும் படக்குழுவினர் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக தயாரிப்பாளர் லலித் தெரிவித்திருந்தார். நேற்று தனது பகுதி படப்பிடிப்பு முடிவடைந்ததால் காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பினார் விஜய். இந்நிலையில் நேற்று லியோ படத்திற்கான காஷ்மீர் சம்பந்தப்பட்ட காட்சிகள் நிறைவு பெற்றதால் இன்று படக்குழுவினர்கள் அனைவரும் தனி விமானத்தில் சென்னை திரும்புகின்றனர். இதையடுத்து சென்னையில் நடக்க உள்ள படப்பிடிப்பில் விஜய், சஞ்சய் தத் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்க உள்ளனர்.