தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

இயக்குனர் மாரி செல்வராஜ் தற்போது மாமன்னன் படத்தின் டப்பிங் பணிகளில் பிஸியாக உள்ளார். இதை தொடர்ந்து வாழை எனும் படத்தையும் இயக்கி முடித்துள்ளார். மாமன்னன் படத்திற்கு பின் இந்தப்படம் வெளியாக உள்ளது.
இதையடுத்து 2 வருடத்திற்கு முன்பு அறிவித்த துருவ் விக்ரம் படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்கவுள்ளார். இந்த படத்திற்காக தீவிர கபடி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் துருவ்.
இந்நிலையில் சமீபத்தில் நடிகர் விக்ரமை சந்தித்து கதை கூறியுள்ளார் மாரி செல்வராஜ். இக்கதையில் விக்ரம் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. துருவ் விக்ரம் படத்திற்கு பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என கூறப்படுகிறது.




