தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

விஜய் நடித்து வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விஜய்யுடன் திரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று ஆப்கானிஸ்தான் நாட்டில் 6.8 ரிக்டர் என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது காஷ்மீர், டில்லி, உத்தரப்பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் ஏற்பட்டது. இதையடுத்து காஷ்மீரில் முகாமிட்டுள்ள லியோ படக்குழுவினருக்கு என்னாச்சு? என்கிற கேள்விகள் சோசியல் மீடியாவில் எழுந்து வந்த நிலையில் தற்போது, லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளது. அதில், காஷ்மீரில் நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் நண்பா என்று தெரிவித்திருக்கிறார்கள். இந்நிலையில் நேற்று நடிகர் விஜய் காஷ்மீரில் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.