மூன்று வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிப்புக்கு திரும்பிய ஐஸ்வர்யா ராய் | ஓய்வு பெற துடிக்கும் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடிக்கும் சல்மான் கான் | என்னுடன் நடிக்க மறுத்தவர்கள் இப்போது என் படத்தை புரமோட் செய்கிறார்கள் ; கென் கருணாஸ் | மேடையில் நாற்காலி கவிழ்ந்து கீழே விழுந்த நாகசைதன்யா | ஒரே நாளில் பரபரப்பை ஏற்படுத்திய விஜய் - த்ரிஷா, ரவி மோகன் - கெனிஷா | வரலட்சுமி இயக்குனராக அறிமுகமாகும் 'எஸ் சரஸ்வதி' தெலுங்கில் மட்டும் ரிலீஸ் | விஜய் தேவரகொன்டா - ராஷ்மிகா வரவேற்பு: தமிழ், கன்னடம், ஹிந்தி திரையுலகினர் 'ஆப்சென்ட்' | தான் எழுதிய 'மைல்கல்' புத்தகத்தை ரஜினியிடம் பரிசாக கொடுத்த இயக்குனர் ஞானவேல் | ஒரே காரில்... ஒரே கலரில்...: ஜோடியாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், திரிஷா | சாரா அர்ஜுனின் வளர்ச்சி பெருமையாக உள்ளது! - சொல்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய் |

விஜய் நடித்து வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விஜய்யுடன் திரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று ஆப்கானிஸ்தான் நாட்டில் 6.8 ரிக்டர் என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது காஷ்மீர், டில்லி, உத்தரப்பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் ஏற்பட்டது. இதையடுத்து காஷ்மீரில் முகாமிட்டுள்ள லியோ படக்குழுவினருக்கு என்னாச்சு? என்கிற கேள்விகள் சோசியல் மீடியாவில் எழுந்து வந்த நிலையில் தற்போது, லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளது. அதில், காஷ்மீரில் நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் நண்பா என்று தெரிவித்திருக்கிறார்கள். இந்நிலையில் நேற்று நடிகர் விஜய் காஷ்மீரில் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.




