10 நாட்களில் ரூ.25 கோடி வசூலைக் கடந்த ‛வித் லவ்' | மரகதநாணயம் 2 படம் தொடங்கியது | கில்லி மீண்டும் ரீ ரிலீஸ் ஆகிறது : மங்கத்தா சாதனையை முறியடிக்குமா? | இனி காமெடி படம் மட்டுமே...? இயக்குனர் பொன்ராம் முடிவு | சிவகார்த்திகேயனின் ‛சேயோன்' | பூவே உனக்காக படம் பிரசாந்த் நடிக்க வேண்டியதா? | இயக்குனர் விஜய்க்கு மறுவாழ்வு தருமா 'காதல்' | இப்ப வருமோ…எப்ப வருமோ….'ஜனநாயகன்' | இயக்குனர்கள் அடிமையாக இருக்கக் கூடாது : புது நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் ஆர்கே செல்வமணி பேச்சு | பா.ஜ., தலைவரின் பேச்சுக்கு திரிஷா கண்டனம் : வருத்தம் தெரிவித்த நயினார் நாகேந்திரன் |

தமிழ் சினிமாவில் அறுவடை நாள், பிக்பாக்கெட், இரும்பு பூக்கள், உருவம் போன்ற படங்களை இயக்கியவர் ஜி.எம்.குமார். அதன்பிறகு பாரதிராஜா இயக்கிய கேப்டன் மகள் என்ற படத்தில் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து வெயில், மலைக்கோட்டை, குருவி, அவன் இவன் உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், தனக்கு தானே ஒரு கண்ணீர் அஞ்சலி பேனரை பதிவிட்டுள்ளார் ஜி.எம்.குமார். அதோடு ஆயிரக்கணக்கான நகைச்சுவை வெளிப்பாடுகள் தான் வாழ்க்கை என்றும் பதிவு போட்டிருக்கிறார்.
ஜி.எம்.குமார் தற்போது புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். அந்த படத்தில் அவர் காரியமாணிக்கம் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதில் தான் அவர் இறந்தது போன்று ஒரு காட்சி இருக்கும் போல் தெரிகிறது. அதற்காக வைக்கப்பட்ட கண்ணீர் அஞ்சலி பேனர் முன்பு நின்று அவரே போட்டோ எடுத்து இப்படி பகிர்ந்துள்ளார். அவரின் அந்த பதிவு வைரலானது.




