எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
'த எலிபென்ட் விஸ்பரர்ஸ்' என்ற ஆவணக் குறும்படம் சிறந்த டாகுமென்டரி குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது. ஊட்டியைச் சேர்ந்த கார்த்திகி கொன்சால்வெஸ் என்ற பெண் இயக்குனர் அந்தப் படத்தை இயக்கியிருந்தார். முதுமலை வனவிலங்கு சரணாலயத்தில் பொம்மன், பெல்லி என்ற தம்பதியர் ஆதரவற்ற யானைககளை வளர்ப்பதைப் பற்றிய டாகுமென்டரியாக அப்படம் உருவானது.
ஆஸ்கர் விருது வென்ற பின் கார்த்திகி சென்னை வந்தார். அவர் தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஆஸ்கர் விருதை அவரிடம் வழங்கி வாழ்த்து பெற்றார். அவருக்கு பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசை வழங்கினார் முதல்வர். மேலும் ஊக்கத்தொகையாக ஒரு கோடி ரூபாயையும் வழங்கினார்.
“ஊட்டியில் வளர்ந்து, நம் தமிழ்நாடு அரசின் யானைப் பாதுகாப்பு முயற்சிகளை #AcademyAwards வரை கொண்டு சென்ற #TheElephantWhisperers இயக்குநர் கார்த்திகி கொன்சால்வெஸ் அவர்களை பாராட்டி ஊக்கத் தொகையாக ரூ.1 கோடி வழங்கினேன். முகம் தெரியாத பலரின் உழைப்பைத் தம் படைப்பால் உலகறியச் செய்ததற்குப் பாராட்டு,” என தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.