மகளிர் ஆணையத்தில் மனைவியுடன் நேரில் ஆஜரான மாதம்பட்டி ரங்கராஜ் | படப்பிடிப்புக்கு 5 நாட்களுக்கு முன்புதான் பைசன் படத்தின் ஸ்கிரிப்டை படித்தேன்! - துருவ் விக்ரம் | ‛உஸ்தாத் பகத்சிங்' படத்தில் இணைந்த பார்த்திபன் | பட தயாரிப்பு நிறுவனம் வழக்கு : நடிகர் விஷால் பதிலளிக்க உத்தரவு | 'கோச்சடையான்' பட விவகாரம் : ரஜினி மனைவி லதாவுக்கு சிக்கல் | விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தின் தமிழ்நாட்டு தியேட்டர் உரிமையை வாங்கிய ரோமியோ பிக்சர்ஸ்! | மோகன்லாலை தொடர்ந்து சிரஞ்சீவிக்கு ஜோடியாகும் மாளவிகா மோகனன்! | காப்புரிமை தொடர்பான 'சோனி' வழக்கு : இளையராஜா பதில் அளிக்க கோர்ட் உத்தரவு | ப்ரீ புக்கிங்கில் முந்தும் 'டியூட்' | 3 ஆண்டு தலைமறைவுக்கு பின் நடிகை மீரா மிதுன் ஆஜர் |
திரையுலகில் வழங்கப்படும் உயர்ந்த விருதான ஆஸ்கர் விருதை வென்ற இரண்டு இந்திய படைப்புகளை பார்லிமென்ட்டில் அடுத்த வாரம் திரையிடப்படவுள்ளதாக தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது : இரண்டு படங்களின் கலைஞர்கள் மற்றும் படக்குழுவினரை கவுரவிக்கும் திட்டமும் உள்ளது. ஆர்ஆர்ஆர் படமும், தி எலிபேன்ட் விஸ்பரர்ஸ் ஆவண குறும்படமும் எம்.பி.க்களுக்கு அடுத்த வாரம் பார்லிமென்ட்டில் பால் யோகி அரங்கத்தில் திரையிடப்படவுள்ளது. இதற்கான முயற்சிகளை அமைச்சர் அனுராக் தாக்குர் மேற்கொண்டு வருகிறார் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.