50 கோடிக்கு பேரம் பேசும் சிவகார்த்திகேயனின் பராசக்தி | ஓடிடி டீலிங் முடிந்த இட்லி கடை : என்ன விலை தெரியுமா? | 23 வருடங்களுக்கு பிறகு பிரசாந்த் - ஹரி கூட்டணி -அதிகாரப்பூர்வ அறிவிப்பு | விஜய்யின் ‛லியோ' பட சாதனையை முறியடித்த அஜித்தின் ‛குட் பேட் அக்லி' டிரைலர்! | பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிக்கும் ‛கொம்பு சீவி' | சத்யராஜ் பாணியில் கதை தேடும் ‛மர்மர்' நாயகன் தேவ்ராஜ்! | தமிழகத்திற்காக மற்ற மாநிலங்களிலும் ‛குட் பேட் அக்லி' படத்தின் அதிகாலை காட்சி ரத்து! | ரோமியோக்களால் மொபைல் நம்பரை மாற்றிய நடிகை | விரும்பிய கல்லூரியில் சேர குத்துச்சண்டை பழகிய பிரேமலு ஹீரோ | புஷ்பா 2 சம்பவம் எதிரொலி ; ஆர்யா-2 ரீ ரிலீஸான தியேட்டர்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு |
பாகுபலி படம் மூலம் தென்னிந்திய அளவில் ரசிகர்களிடம் பிரபலமானவர் தெலுங்கு நடிகர் ராணா. சமீப காலமாக பிரபல ஹீரோக்கள் வெப்சீரிஸ்களின் பக்கம் தங்களது கவனத்தை திருப்பியுள்ள நிலையில் நடிகர் ராணாவும் முதன் முறையாக ராணா நாயுடு என்கிற வெப்சீரிஸில் நடித்துள்ளார்.
நிஜத்தில் இவரது சித்தப்பாவான நடிகர் வெங்கடேஷ், இந்த வெப்சீரிஸில் ராணாவின் தந்தையாக நடித்துள்ளார். தந்தைக்கும் மகனுக்கும் இடையே நடக்கும் ஈகோ போராட்டத்தை மையமாக வைத்து இந்த வெப்சீரிஸ் உருவாகி உள்ளது. சமீபத்தில் எட்டு எபிசோடுகளாக வெளியான இந்த வெப்சீரிஸுக்கு ஒரு பக்கம் ரசிகர்களின் ஆதரவு இருந்தாலும் பொதுவான நெட்டிசன்கள் பலரிடம் இருந்து கடுமையான விமர்சனங்கள் தான் அதிகம் வெளியாகின.
காரணம் இந்த இந்த வெப்சீரிஸில் ராணாவும் சரி.. வெங்கடேஷும் சரி, பல இடங்களில் சரளமாக கெட்ட வார்த்தைகளை பேசியுள்ளனர். இதன் புரமோஷன் நிகழ்ச்சியின்போதே கூட நடிகர் ராணா இது பற்றி கூறியிருந்தார். ஆனால் தற்போது இந்த வெப்சீரிஸ் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்களே ஒரு கட்டத்தில் இந்த வார்த்தைகளை கேட்டு எரிச்சல் அடையும் விதமாக ஓவர் டோஸ் ஆக மாறிவிட்டது. இதற்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்ததைக் கண்டு, நடிகர் ராணா தனது சோசியல் மீடியா பக்கத்தில், “இந்த வெப்சீரிஸை ஆதரித்தவர்களுக்கு நன்றி.. இதை வெறுப்பவர்களிடம் நான் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.