‛பொன்னியின் செல்வன்' பார்க்க மாட்டேன்: திரைப்பட இயக்குனர் லெனின்பாரதி | வெகுமதியாய் கொடுத்த ரூபாயை பிரேம் போட்டு வச்சுருக்கேன்: 'ருக்மணி' பாபு | தமிழில் ரீமேக் ஆகும் ஹிந்தி படம்! | ரீ என்ட்ரி குறித்து நெகிழ்ச்சியாக பகிர்ந்த மீரா ஜாஸ்மின்! | ஆர்யா - ஹிப் ஹாப் ஆதி படங்களின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? | எஸ்.ஜே.சூர்யா- பிரியா பவானி சங்கரின் லிப்லாக் காட்சியுடன் வெளியான பொம்மை டிரைலர்! | டென்மார்க்கிற்கு சுற்றுப்பயணம் சென்ற சூர்யா - ஜோதிகா! | தருமை ஆதீனத்திடம் ஆசி பெற்ற ரஜினிகாந்தின் இளைய மகள் | லியோ படத்தின் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! | விக்ரம் பிரபு புதிய படத்தின் ரிலீஸ் தேதி இதோ! |
தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. சமீபத்தில் மயோசிட்டிஸ் என்ற அரியவகை தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு தற்போது குணமாகி உள்ளார். இவர் நடித்த 'சாகுந்தலம்' திரைப்படம் ஏப்.,14ல் வெளியாகிறது. இதனையடுத்து விஜய் தேவரகொண்டா உடன் 'குஷி' படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது வீட்டில் உள்ள லிங்க பைரவி முன் அமர்ந்து வழிபடும் புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். அதில் அவர், 'சில சமயங்களில் சூப்பர் ஹியூமன் சக்தி தேவையில்லை என்பதுதான் எனது கருத்து. நம்பிக்கை உங்களை எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லும். நம்பிக்கை உங்களை அமைதியாக வைத்திருக்கும், நம்பிக்கை உங்கள் ஆசிரியராகவும் நண்பராகவும் மாற்றும். மொத்தத்தில் நம்பிக்கையே உங்களை சூப்பர் ஹியூமனாக மாற்றும்' என்று தெரிவித்துள்ளார். சமந்தாவின் இந்த பதிவுக்கு பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.