ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
'கண்ணும் கண்ணும் கொள்யைடித்தால்' படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில், சிம்பு நடிக்க உள்ள அவரது 48வது படத்தை கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இப்படம் பற்றிய அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியானது.
சரித்திரப் படமாக உருவாக உள்ளதாக சொல்லப்படும் இப்படத்திற்காக 100 கோடி ரூபாயை பட்ஜெட்டாக ஒதுக்கியுள்ளார்கள் எனத் தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயம் சிம்புவிற்கு மட்டுமே சம்பளமாக 40 கோடி தருகிறார்கள் என்றும் பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள். சிம்பு அவ்வளவு சம்பளத்தைக் கேட்டிருப்பது இதுவே முதல் முறை என்பது கூடுதல் தகவல்.
அதிகபட்சமாக 10 கோடி மட்டுமே வாங்கிய சிம்பு, 'வெந்து தணிந்தது காடு' படத்திற்குப் பின் தனக்கு யார் அதிக சம்பளம் தருகிறார்களோ அவர்களது படத்தில் நடிக்க முடிவெடுத்ததாகச் சொல்கிறார்கள். சிம்புவிற்கு மட்டுமே 40 கோடியைக் கொடுத்துவிட்டு மீதியுள்ள 60 கோடியில் எப்படி சரித்திரப் படத்தைத் தயாரிக்க முடியும் என்றும் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.