‛பொன்னியின் செல்வன்' பார்க்க மாட்டேன்: திரைப்பட இயக்குனர் லெனின்பாரதி | வெகுமதியாய் கொடுத்த ரூபாயை பிரேம் போட்டு வச்சுருக்கேன்: 'ருக்மணி' பாபு | தமிழில் ரீமேக் ஆகும் ஹிந்தி படம்! | ரீ என்ட்ரி குறித்து நெகிழ்ச்சியாக பகிர்ந்த மீரா ஜாஸ்மின்! | ஆர்யா - ஹிப் ஹாப் ஆதி படங்களின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? | எஸ்.ஜே.சூர்யா- பிரியா பவானி சங்கரின் லிப்லாக் காட்சியுடன் வெளியான பொம்மை டிரைலர்! | டென்மார்க்கிற்கு சுற்றுப்பயணம் சென்ற சூர்யா - ஜோதிகா! | தருமை ஆதீனத்திடம் ஆசி பெற்ற ரஜினிகாந்தின் இளைய மகள் | லியோ படத்தின் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! | விக்ரம் பிரபு புதிய படத்தின் ரிலீஸ் தேதி இதோ! |
கடந்த சில ஆண்டுகளாகவே தென்னிந்தியாவில் உருவாகி, ஹிந்தியில் வெளியாகும் படங்கள் அங்குள்ள முன்னணி பாலிவுட் நடிகர்களின் படங்களை விட அதிக அளவில் வசூலித்து வருகின்றன. அந்தவகையில் கேஜிஎப் 2, பாகுபலி 2 ஆகிய படங்கள் ஹிந்தியில் மிகப்பெரிய வசூலை பெற்றன. குறிப்பாக இதுவரை பாலிவுட்டில் வெளியான படங்களில் பாகுபலி 2 படம் 510 கோடி வசூலித்து முதல் இடத்தை தக்க வைத்திருந்தது.
அதற்கு அடுத்தடுத்த இடங்களில் கேஜிஎப் 2 மற்றும் ஆமிர்கானின் தங்கல் ஆகியவை இருந்தன. பாகுபலி 2வின் இந்த சாதனை கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் யாராலும் முறியடிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் படம் தற்போது இந்தியில் மட்டும் 526 கோடி வசூலித்து பாகுபலி 2 வசூல் சாதனையை ஓவர்டேக் செய்துள்ளது.
இதனைத் தொடர்ந்து பதான் படத்தின் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் சோசியல் மீடியாவில் கூறும்போது, “எனக்கு இது மிகவும் பெருமையான தருணம்.. இந்த படத்தை உற்சாகப்படுத்திய அனைத்து பார்வையாளர்களுக்கும் மீண்டும் ஒருமுறை எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.