ஓடிடி தளத்திலும் வெளியாகும் 'பாகுபலி தி எபிக்' | 31 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸிற்கு தயாராகும் சுரேஷ் கோபியின் கமிஷனர் | பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் | ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி |

கடந்த சில ஆண்டுகளாகவே தென்னிந்தியாவில் உருவாகி, ஹிந்தியில் வெளியாகும் படங்கள் அங்குள்ள முன்னணி பாலிவுட் நடிகர்களின் படங்களை விட அதிக அளவில் வசூலித்து வருகின்றன. அந்தவகையில் கேஜிஎப் 2, பாகுபலி 2 ஆகிய படங்கள் ஹிந்தியில் மிகப்பெரிய வசூலை பெற்றன. குறிப்பாக இதுவரை பாலிவுட்டில் வெளியான படங்களில் பாகுபலி 2 படம் 510 கோடி வசூலித்து முதல் இடத்தை தக்க வைத்திருந்தது.
அதற்கு அடுத்தடுத்த இடங்களில் கேஜிஎப் 2 மற்றும் ஆமிர்கானின் தங்கல் ஆகியவை இருந்தன. பாகுபலி 2வின் இந்த சாதனை கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் யாராலும் முறியடிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் படம் தற்போது இந்தியில் மட்டும் 526 கோடி வசூலித்து பாகுபலி 2 வசூல் சாதனையை ஓவர்டேக் செய்துள்ளது.
இதனைத் தொடர்ந்து பதான் படத்தின் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் சோசியல் மீடியாவில் கூறும்போது, “எனக்கு இது மிகவும் பெருமையான தருணம்.. இந்த படத்தை உற்சாகப்படுத்திய அனைத்து பார்வையாளர்களுக்கும் மீண்டும் ஒருமுறை எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.