பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
ஜோக்கர், ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், நண்பகல் நேரத்து மயக்கம் போன்ற படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன். தற்போது இடும்பன்காரி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் விமான நிலையத்தில் எதிர்பாராத விதமாக இயக்குனர் பாரதிராஜாவை சந்தித்துள்ளார் ரம்யா பாண்டியன். அது குறித்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டிருக்கும் அவர், நெகிழ்ச்சியான பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், இந்திய சினிமாவின் தலைசிறந்த இயக்குனர் பாரதிராஜா அவர்களுடன் பயணம் செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. பல கேள்விகளை எழுப்பிய ஒரு குழந்தைக்கு எல்லா பதில்களையும் வழங்கிய வழிகாட்டி. உண்மையிலேயே ஒரு அற்புதமான பயணம். அவரது விலை மதிக்க முடியாத தகவல்களுக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் என்னுடைய நன்றி என தெரிவித்திருக்கிறார்.