விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி | மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம் |

கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தில் நடித்து முடித்து இருக்கிறார் சிம்பு. இந்த படத்தை அடுத்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார் சிம்பு. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2015ம் ஆண்டில் அனிருத் இசையில் சிம்பு பாடிய பீப் சாங் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பெண்களை இழிவுபடுத்தும் வகையில் எழுதப்பட்டிருந்த அந்த பாடலுக்கு மாதர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, சிம்பு, அனிருத்தை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். அந்த சர்ச்சையை தொடர்ந்து சிம்புவும் அனிருத்தும் எட்டு ஆண்டுகளாக இணைந்து பணியாற்றவில்லை.
இந்த நிலையில் தான் தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்திற்கு இசையமைக்க போகிறார் அனிருத். தற்போது கமலின் இந்தியன் 2, ரஜினியின் ஜெயிலர், விஜய்யின் லியோ, அஜித் 62 மற்றும் ஷாருக்கானின் ஜவான் என மெகா ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து வரும் அனிருத், இந்த வரிசையில் அடுத்தபடியாக சிம்புவின் படத்திற்கும் இசையமைக்கப்போகிறாராம். இது தவிர, தெலுங்கில் ஜூனியர் என்டிஆர், நானி நடிக்கும் படங்களுக்கும் அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.