ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தில் நடித்து முடித்து இருக்கிறார் சிம்பு. இந்த படத்தை அடுத்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார் சிம்பு. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2015ம் ஆண்டில் அனிருத் இசையில் சிம்பு பாடிய பீப் சாங் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பெண்களை இழிவுபடுத்தும் வகையில் எழுதப்பட்டிருந்த அந்த பாடலுக்கு மாதர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, சிம்பு, அனிருத்தை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். அந்த சர்ச்சையை தொடர்ந்து சிம்புவும் அனிருத்தும் எட்டு ஆண்டுகளாக இணைந்து பணியாற்றவில்லை.
இந்த நிலையில் தான் தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்திற்கு இசையமைக்க போகிறார் அனிருத். தற்போது கமலின் இந்தியன் 2, ரஜினியின் ஜெயிலர், விஜய்யின் லியோ, அஜித் 62 மற்றும் ஷாருக்கானின் ஜவான் என மெகா ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து வரும் அனிருத், இந்த வரிசையில் அடுத்தபடியாக சிம்புவின் படத்திற்கும் இசையமைக்கப்போகிறாராம். இது தவிர, தெலுங்கில் ஜூனியர் என்டிஆர், நானி நடிக்கும் படங்களுக்கும் அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.