ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
தனுஷ் நடித்த நானே வருவேன் என்ற படத்தை இயக்கினார் செல்வராகவன். அந்த படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. அதையடுத்து சாணிக்காயுதம், பீஸ்ட், பகாசூரன் ஆகிய படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்த செல்வராகவன், அடுத்து தனுஷ் நடிக்கும் ஒரு படத்தை இயக்கப் போவதாக செய்திகள் வருகின்றன. இந்த நிலையில் பா. பாண்டி படத்தை அடுத்து தனது 50வது படத்தை இயக்க உள்ளார் தனுஷ்.
இதுபற்றி செல்வராகவன் ஒரு பேட்டியில் கூறுகையில், ‛‛தனுஷ் இயக்கும் புதிய படத்தின் முழு கதையும் எனக்கு தெரியும். அது ஒரு சிறந்த கதை. கண்டிப்பாக இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறும். அதோடு, இந்த படத்தில் நானும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். அப்படி அவர் வாய்ப்பு கொடுத்தால் அதை சிறப்பாக செய்து காட்ட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று தெரிவித்துள்ளார் செல்வராகவன்.