'லோகா 2' படப்பிடிப்பு எப்போது? அப்டேட் கொடுத்த கல்யாணி பிரியதர்ஷன் | ஏ.ஐ., படிக்கிறாரா சிம்பு? | மை லார்ட் வெற்றி படமா... சசிகுமார் பேசியது என்ன? | இன்ஸ்டா பாலோயர்கள் வைத்து தான் சம்பளமா... : ஷா ரா புலம்பல் | சூர்யாவை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து? | படப்பிடிப்புக்கு முன்பே ஒரு மில்லியன் ரீல்களை எட்டிய 'ஏஏ23' தீம் | பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நித்யா மேனன்! | நண்பர்களுடன் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்த சிவகார்த்திகேயன்! | சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் மஹத் ராகவேந்திரா | துருவ் விக்ரம் அடுத்த படத்தை குறித்து புதிய தகவல் இதோ |

தனுஷ் நடித்த நானே வருவேன் என்ற படத்தை இயக்கினார் செல்வராகவன். அந்த படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. அதையடுத்து சாணிக்காயுதம், பீஸ்ட், பகாசூரன் ஆகிய படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்த செல்வராகவன், அடுத்து தனுஷ் நடிக்கும் ஒரு படத்தை இயக்கப் போவதாக செய்திகள் வருகின்றன. இந்த நிலையில் பா. பாண்டி படத்தை அடுத்து தனது 50வது படத்தை இயக்க உள்ளார் தனுஷ்.
இதுபற்றி செல்வராகவன் ஒரு பேட்டியில் கூறுகையில், ‛‛தனுஷ் இயக்கும் புதிய படத்தின் முழு கதையும் எனக்கு தெரியும். அது ஒரு சிறந்த கதை. கண்டிப்பாக இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறும். அதோடு, இந்த படத்தில் நானும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். அப்படி அவர் வாய்ப்பு கொடுத்தால் அதை சிறப்பாக செய்து காட்ட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று தெரிவித்துள்ளார் செல்வராகவன்.




