20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
தனுஷ் நடித்த நானே வருவேன் என்ற படத்தை இயக்கினார் செல்வராகவன். அந்த படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. அதையடுத்து சாணிக்காயுதம், பீஸ்ட், பகாசூரன் ஆகிய படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்த செல்வராகவன், அடுத்து தனுஷ் நடிக்கும் ஒரு படத்தை இயக்கப் போவதாக செய்திகள் வருகின்றன. இந்த நிலையில் பா. பாண்டி படத்தை அடுத்து தனது 50வது படத்தை இயக்க உள்ளார் தனுஷ்.
இதுபற்றி செல்வராகவன் ஒரு பேட்டியில் கூறுகையில், ‛‛தனுஷ் இயக்கும் புதிய படத்தின் முழு கதையும் எனக்கு தெரியும். அது ஒரு சிறந்த கதை. கண்டிப்பாக இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறும். அதோடு, இந்த படத்தில் நானும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். அப்படி அவர் வாய்ப்பு கொடுத்தால் அதை சிறப்பாக செய்து காட்ட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று தெரிவித்துள்ளார் செல்வராகவன்.