இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
தனுஷ் நடித்த நானே வருவேன் என்ற படத்தை இயக்கினார் செல்வராகவன். அந்த படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. அதையடுத்து சாணிக்காயுதம், பீஸ்ட், பகாசூரன் ஆகிய படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்த செல்வராகவன், அடுத்து தனுஷ் நடிக்கும் ஒரு படத்தை இயக்கப் போவதாக செய்திகள் வருகின்றன. இந்த நிலையில் பா. பாண்டி படத்தை அடுத்து தனது 50வது படத்தை இயக்க உள்ளார் தனுஷ்.
இதுபற்றி செல்வராகவன் ஒரு பேட்டியில் கூறுகையில், ‛‛தனுஷ் இயக்கும் புதிய படத்தின் முழு கதையும் எனக்கு தெரியும். அது ஒரு சிறந்த கதை. கண்டிப்பாக இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறும். அதோடு, இந்த படத்தில் நானும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். அப்படி அவர் வாய்ப்பு கொடுத்தால் அதை சிறப்பாக செய்து காட்ட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று தெரிவித்துள்ளார் செல்வராகவன்.