மீண்டும் வந்தார் ‛புன்னகை பூ' கீதா | சித்தா படத்திற்கும், காவிரி பிரச்னைக்கும் தொடர்பில்லை : சித்தார்த் | இரட்டை சகோதரிகள் கதாநாயகியாக வெற்றி | போதைக்கு எதிராக போராடும் சாலா | உறுப்பினர்கள் பற்றி அவதூறு பரப்பினால் நடவடிக்கை: தயாரிப்பாளர் சங்கம் எச்சரிக்கை | ரஜினி 170 : புது ஹேர்ஸ்டைலில் ரஜினிகாந்த்… | ஸ்ரீதேவி மறைவுக்கு என்ன காரணம்? - போனி கபூர் விளக்கம் | மெரி கிறிஸ்துமஸ் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் | நம்மைக் காக்க ஒரு சூப்பர் சக்தி : விஷ்ணுமாயா கோவிலில் குஷ்பு நெகிழ்ச்சி | 1100 தியேட்டர்களில் வெளியாகும் '800' |
நடிகர் சிம்பு தற்போது கேங்ஸ்டராக நடித்து முடித்துள்ள படம் பத்து தல. இந்த படம் வருகிற மார்ச் மாதம் திரைக்கு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில ஆண்டுகளாகவே சிம்புவின் திருமணம் குறித்த செய்திகள் அவ்வப்போது வெளியாவதும், அதையடுத்து அவரது பெற்றோர் மறுப்பு தெரிவிப்பதுமாக இருந்து வருகிறது. தற்போது சிம்புவுக்கு 40 வயது ஆகிவிட்டதால் அவரது பெற்றோர் விரைவில் அவருக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிட்டு இருப்பதாக மீண்டும் ஒரு புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.
சிம்புவின் ஜாதகத்துக்கு பொருத்தக்கூடிய பெண்ணை அவர்கள் தேடி வந்த நிலையில், தற்போது இலங்கையைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரின் மகளை சிம்புவுக்கு அவரது தந்தையான டி. ராஜேந்தர் பேசி முடித்து வைத்திருப்பதாக சமூகவலைதளங்களில் செய்தி வெளியாகி உள்ளது.
இதற்கு முன்பு சிம்புவின் திருமணம் குறித்து வெளியான செய்திகள் வதந்தியாகி விட்டபோதும் இந்த முறை கண்டிப்பாக சிம்பு திருமணம் நடைபெற்று விடும் என்றும் சினிமா வட்டாரங்களில் பேசிக் கொள்கிறார்கள்.