நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

நடிகர் சிம்பு தற்போது கேங்ஸ்டராக நடித்து முடித்துள்ள படம் பத்து தல. இந்த படம் வருகிற மார்ச் மாதம் திரைக்கு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில ஆண்டுகளாகவே சிம்புவின் திருமணம் குறித்த செய்திகள் அவ்வப்போது வெளியாவதும், அதையடுத்து அவரது பெற்றோர் மறுப்பு தெரிவிப்பதுமாக இருந்து வருகிறது. தற்போது சிம்புவுக்கு 40 வயது ஆகிவிட்டதால் அவரது பெற்றோர் விரைவில் அவருக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிட்டு இருப்பதாக மீண்டும் ஒரு புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.
சிம்புவின் ஜாதகத்துக்கு பொருத்தக்கூடிய பெண்ணை அவர்கள் தேடி வந்த நிலையில், தற்போது இலங்கையைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரின் மகளை சிம்புவுக்கு அவரது தந்தையான டி. ராஜேந்தர் பேசி முடித்து வைத்திருப்பதாக சமூகவலைதளங்களில் செய்தி வெளியாகி உள்ளது.
இதற்கு முன்பு சிம்புவின் திருமணம் குறித்து வெளியான செய்திகள் வதந்தியாகி விட்டபோதும் இந்த முறை கண்டிப்பாக சிம்பு திருமணம் நடைபெற்று விடும் என்றும் சினிமா வட்டாரங்களில் பேசிக் கொள்கிறார்கள்.