இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்கள் ஜூனியர் என்டிஆர் மற்றும் அல்லு அர்ஜுன் இருவருக்குமே மிக பெரிய ரசிக பட்டாளமும் பெரிய மார்கெட்டும் உள்ளது. ஜூனியர் என்டிஆர் கடைசியாக இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் உடன் இணைந்து நடித்த ஆர்ஆர்ஆர் உலக அளவில் மிக பெரிய வசூல் சாதனை ஈட்டியது.
அல்லு அர்ஜுன் நடிப்பில் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021ல் ஆண்டில் வெளிவந்த புஷ்பா முதல் பாகமும் வசூல் ரீதியாக மிக பெரிய வெற்றி படமாக மாறியது. தற்போது அல்லு அர்ஜுன் புஷ்பா இரண்டாம் பாகத்தில் நடித்து கொண்டு இருக்கிறார். ஜூனியர் என்டிஆர் நடிக்கும் 30வது படத்தை இயக்குனர் கொரட்லா சிவா இயக்குகிறார்.
இந்நிலையில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் 30 வது படமும் , அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா இரண்டாம் பாகமும் அடுத்த ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. மிகப்பெரிய இரு படங்கள் ஒரே தேதியில் வெளியாக உள்ளதால் ரசிகர்களுக்கிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.