இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் தற்போது துருவ நட்சத்திரம் படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் பிஸியாக இருக்கிறார். அதோடு விஜய்யின் லியோ படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதையடுத்து தனது அடுத்த படத்தின் கதையை முடிவு செய்துள்ளாராம். இந்த கதை இரண்டு கதாநாயகர்கள் கொண்ட கதை என்பதால் இதில் நடிக்க நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அபிஷேக் பச்சன் இருவரிடமும் பேச்சு வார்த்தை நடக்கிறது.
இப்படம் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் என்பதால் இதனை ஒரு பான் இந்திய படமாக்க திட்டமிட்டு உள்ளார் கவுதம் மேனன். இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த வெந்து தணிந்தது காடு படம் பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும் சுமாரான வெற்றியை பெற்றது. அதேபோல் நடிகர் விஜய் சேதுபதி, அபிஷேக் பச்சன் ஆகிய இருவரும் நடித்த எந்த படமும் சமீபத்தில் வெற்றி பெறவில்லை . தொடர் தோல்விகளை கொடுத்த இவர்கள் தோல்வியில் இருந்து மீண்டு கூட்டணியாக ஒரு நல்ல வெற்றி திரைப்படம் தருவார்களா என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழும்பி வருகிறது.