இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தில் திரிஷா, பிரியா ஆனந்தைத் தொடர்ந்து இன்னொரு கேரக்டரில் நடிக்கிறார் அபிராமி வெங்கடாசலம். இதுகுறித்த தகவலை தனது சோசியல் மீடியாவில் தெரிவித்திருந்த அபிராமி வெங்கடாச்சலம், சிவராத்திரி அன்று காளகஸ்திக்கு செல்லும் போது சாலையில் அதிரடி நடனமாடிய ஒரு வீடியோவையும் பதிவிட்டு இருந்தார். அதையடுத்து தற்போது மீண்டும் தனது இன்ஸ்டாவில் நடராஜரின் உருவப்படத்தை தனது முதுகில் டாட்டூவாக குத்தியிருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார் அபிராமி. அதோடு பக்தி குறித்து எனக்கு யாரும் பாடம் எடுக்க வேண்டாம். என்னுடைய சிவனை எங்கே வைக்க வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட விஷயம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
மேலும்
மாசில் வீணையும்,
மாலை மதியமும்,
வீசு தென்றலும்,
வீங்கிள வேனிலும்,
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை
இணையடி நீழலே
என்ற ஒரு சிவன் பாடலையும் அவர் பதிவிட்டு இருக்கிறார்.