பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா | ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன் மீண்டும் இணைந்தனர் | மீண்டும் தமிழில் நடிக்கும் அன்னாபென் | அரசன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சிவாஜி குடும்பத்தை கவுரவிக்கும் பராசக்தி படக்குழு | விஜய் தேவரகொண்டாவிற்கு வில்லன் விஜய் சேதுபதி...? | சூர்யா 47 : நெட்பிளிக்ஸ் முதலீட்டில் அமோக ஆரம்பம் ? |

அடுத்து வெளிவர உள்ள உதயநிதி ஸ்டாலினின் படம் 'கண்ணை நம்பாதே'. கடைசி படமாக 'மாமன்னன்' வெளியாகிறது. கண்ணை நம்பாதே படத்தை 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தை இயக்கிய மு.மாறன் இயக்கி உள்ளார். இதில் உதயநிதி ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார். இவர்களுடன் சதீஷ், பூமிகா, பிரசன்னா, ஸ்ரீகாந்த், வசுந்தரா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். சித்துகுமார் இசை அமைத்துள்ளார், ஜலந்தர் வாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அடுத்த மாதம் படம் வெளிவருகிறது.
படம் பற்றி இயக்குனர் மாறன் கூறியதாவது: ஒரு பிரச்னையில் சிக்கும் உதயநிதி அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. ஒரு இரவில் நடக்கும் கதை. அந்த ஒரு இரவுக்கு முன்னும், பின்னுமான சம்பவங்கள் திரைக்கதையில் சொல்லப்படுகிறது. இதில் உதயநிதி கிராபிக்ஸ் டிசைனராக நடித்திருக்கிறார். அவரது காதலியாக ஆத்மிகா நடித்துள்ளார். இரவுக்கு ஆயிரம் கண்கள் படம் போன்றே இதுவும் கிரைம் த்ரில்லர் படம். 80 சதவீத காட்சிகள் இரவில்தான் நடக்கும். படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது என்றார்.