‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
அடுத்து வெளிவர உள்ள உதயநிதி ஸ்டாலினின் படம் 'கண்ணை நம்பாதே'. கடைசி படமாக 'மாமன்னன்' வெளியாகிறது. கண்ணை நம்பாதே படத்தை 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தை இயக்கிய மு.மாறன் இயக்கி உள்ளார். இதில் உதயநிதி ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார். இவர்களுடன் சதீஷ், பூமிகா, பிரசன்னா, ஸ்ரீகாந்த், வசுந்தரா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். சித்துகுமார் இசை அமைத்துள்ளார், ஜலந்தர் வாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அடுத்த மாதம் படம் வெளிவருகிறது.
படம் பற்றி இயக்குனர் மாறன் கூறியதாவது: ஒரு பிரச்னையில் சிக்கும் உதயநிதி அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. ஒரு இரவில் நடக்கும் கதை. அந்த ஒரு இரவுக்கு முன்னும், பின்னுமான சம்பவங்கள் திரைக்கதையில் சொல்லப்படுகிறது. இதில் உதயநிதி கிராபிக்ஸ் டிசைனராக நடித்திருக்கிறார். அவரது காதலியாக ஆத்மிகா நடித்துள்ளார். இரவுக்கு ஆயிரம் கண்கள் படம் போன்றே இதுவும் கிரைம் த்ரில்லர் படம். 80 சதவீத காட்சிகள் இரவில்தான் நடக்கும். படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது என்றார்.