விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் | இன்று முதல் ‛இட்லி கடை' டப்பிங் பணி துவங்குகிறது | ஜெய்யின் ‛சட்டென்று மாறுது வானிலை' |
இசை ஆல்பங்களின் மூலம் புகழ்பெற்றவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. அதன்பிறகு சினிமா இசை அமைப்பாளர் ஆனார், தொடர்ச்சியாக நடிகர், இயக்குனர் என்று தன்னை வளர்த்துக் கொண்டார். அவரின் முதல் படம் 'மீசைய முறுக்கு' வெற்றி பெற்றது. அதன் பிறகு நடித்த நட்பே துணை, நான் சிரித்தால், சிவகுமாரின் சபதம், அன்பறிவு படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. தற்போது வீரன், பி.டி.சார் படங்களில் நடித்து வருகிறார்.
ஆதியின் படங்கள் எப்படி இருந்தாலும் அவரின் தனி இசை ஆல்பங்களுக்கு எப்போதுமே ஒரு வரவேற்பு இருக்கிறது. அதனால் அவர் தொடர்ந்து இசை ஆல்பங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வரிசையில் தற்போது காதலர் தினமான இன்று 'பொய் பொய் பொய்' என்ற இசை ஆல்பத்தை காதலர் தின சிறப்பு ஆல்பமாக வெளியிட்டுள்ளார்.
ராப் வகை பாடலாக உருவாகியிருக்கும் இப்பாடல் முழுக்க முழுக்க காதலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. காதலில் ஏமாற்றி செல்லும் பெண்ணின் துரோகம், வலி, ஏமாற்றம் என காதலின் துயர முகத்தை அழுத்தமான வரிகளில், பேசுகிறது இப்பாடல். தொடர்ந்து மாதாமாதம், ஒரு சுயாதீன பாடலை வெளியிடப்போவதாகவும் ஆதி அறிவித்துள்ளார்.