பவதாரிணிக்கு இசை அஞ்சலி செலுத்திய ஷாலினி | அருள்நிதிக்கு ஜோடியாகும் தன்யா ரவிச்சந்திரன்! | தரைமட்டமானது சென்னை அடையாளங்களில் ஒன்றான உதயம் தியேட்டர் | வலைதளங்களில் வைரலான அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ | பழசை மறக்காத சூரி | ஹேக் செய்யப்பட்ட திரிஷாவின் எக்ஸ் கணக்கு | இரண்டு பாகங்களாக உருவாகும் கார்த்தியின் 29வது படம்! | ஆண் குழந்தை தான் வாரிசுக்கு அடையாளமா... சிரஞ்சீவி பேச்சால் சர்ச்சை | 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' இசை வெளியீட்டு விழாவை தனுஷ் புறக்கணித்தது ஏன்? | நான் காப்பி ரைட்ஸ் கேட்க மாட்டேன் - இசையமைப்பாளர் தேவா |
இசை ஆல்பங்களின் மூலம் புகழ்பெற்றவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. அதன்பிறகு சினிமா இசை அமைப்பாளர் ஆனார், தொடர்ச்சியாக நடிகர், இயக்குனர் என்று தன்னை வளர்த்துக் கொண்டார். அவரின் முதல் படம் 'மீசைய முறுக்கு' வெற்றி பெற்றது. அதன் பிறகு நடித்த நட்பே துணை, நான் சிரித்தால், சிவகுமாரின் சபதம், அன்பறிவு படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. தற்போது வீரன், பி.டி.சார் படங்களில் நடித்து வருகிறார்.
ஆதியின் படங்கள் எப்படி இருந்தாலும் அவரின் தனி இசை ஆல்பங்களுக்கு எப்போதுமே ஒரு வரவேற்பு இருக்கிறது. அதனால் அவர் தொடர்ந்து இசை ஆல்பங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வரிசையில் தற்போது காதலர் தினமான இன்று 'பொய் பொய் பொய்' என்ற இசை ஆல்பத்தை காதலர் தின சிறப்பு ஆல்பமாக வெளியிட்டுள்ளார்.
ராப் வகை பாடலாக உருவாகியிருக்கும் இப்பாடல் முழுக்க முழுக்க காதலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. காதலில் ஏமாற்றி செல்லும் பெண்ணின் துரோகம், வலி, ஏமாற்றம் என காதலின் துயர முகத்தை அழுத்தமான வரிகளில், பேசுகிறது இப்பாடல். தொடர்ந்து மாதாமாதம், ஒரு சுயாதீன பாடலை வெளியிடப்போவதாகவும் ஆதி அறிவித்துள்ளார்.