த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' | குழந்தைகளின் உளவியலை பேசும் 'நாங்கள்' | சிங்கப்பூர் பள்ளியில் படிக்கும் பவன் கல்யாண் மகன் தீ விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதி | பிளாஷ்பேக்: கடைசி வரை ஹீரோயின் ஆக முடியாத பிருந்தா பரேக் |
எண்பது தொண்ணூறுளில் தமிழ் உட்பட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் நடிகை பானுப்ரியா. ஒரு திறமையான நடன கலைஞரான இவர் நான் நடித்து வந்த சமயத்திலேயே தன்னுடன் நடித்த சக நடிகைகள் பலருக்கும் டப்பிங் குரலும் கொடுத்துள்ளார். தனியாக நடன பள்ளி நடத்தி வந்த இவர் ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து ஒதுங்கி எப்போதாவது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது தான் கடந்த இரண்டு வருடமாக நினைவாற்றல் இழப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.
அதனாலேயே நடனத்திற்காக தற்போது பிராக்டிஸ் செய்வதைக் கூட நிறுத்திவிட்டதாகவும் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று படங்கள் மட்டுமே நடிக்க ஒப்புக்கொள்வதாகவும் கூறியுள்ளார். இதற்குமுன்பு சில நேரங்கள் சில மனிதர்கள் என்கிற படத்தில் தான் நடித்தபோது டைரக்டர் ஆக்சன் என்று சொன்னபிறகும் வசனம் ஞாபகத்துக்கு வராமல் தடுமாறி நின்றதையும் குறிப்பிட்டுள்ளார் பானுப்ரியா.