சூர்யாவுக்கு வில்லன் ஆன ஆர்.ஜே.பாலாஜி : கருப்பு டிரைலருக்கு வரவேற்பு | தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த ராஜசேகர் | பிளாஷ்பேக் : திரைக்கதை சொதப்பலால் தோல்வி அடைந்த சிவாஜி படம் | சிறப்பு காட்சி பார்த்துவிட்டு புகழ்வதை நம்பாதீங்க : தெளிவான சினிமா ரசிகர்கள் | நுாறுசாமி கதை உருவானது எப்படி? | முதல்வர் விஜய் - ரஜினி சந்திப்பு நடக்குமா? நண்பரை நேரில் வாழ்த்துவாரா அஜித் | விஜய் பதவியேற்பு விழாவில் த்ரிஷா : இந்திய அளவில் வைரல் | பவன் கல்யாண் வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்த பிரதமர் மோடி | வினியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் ஒத்துழைப்பை கேட்கும் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் |

எண்பது தொண்ணூறுளில் தமிழ் உட்பட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் நடிகை பானுப்ரியா. ஒரு திறமையான நடன கலைஞரான இவர் நான் நடித்து வந்த சமயத்திலேயே தன்னுடன் நடித்த சக நடிகைகள் பலருக்கும் டப்பிங் குரலும் கொடுத்துள்ளார். தனியாக நடன பள்ளி நடத்தி வந்த இவர் ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து ஒதுங்கி எப்போதாவது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது தான் கடந்த இரண்டு வருடமாக நினைவாற்றல் இழப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.
அதனாலேயே நடனத்திற்காக தற்போது பிராக்டிஸ் செய்வதைக் கூட நிறுத்திவிட்டதாகவும் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று படங்கள் மட்டுமே நடிக்க ஒப்புக்கொள்வதாகவும் கூறியுள்ளார். இதற்குமுன்பு சில நேரங்கள் சில மனிதர்கள் என்கிற படத்தில் தான் நடித்தபோது டைரக்டர் ஆக்சன் என்று சொன்னபிறகும் வசனம் ஞாபகத்துக்கு வராமல் தடுமாறி நின்றதையும் குறிப்பிட்டுள்ளார் பானுப்ரியா.