அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, சரத்குமார், பிரபு, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி திரைக்கு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ள பொன்னியின் செல்வன் இரண்டாம் பக்கத்தின் இறுதி கட்டப்பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
ஆனால் நேற்றைய தினம் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் இறுதி கட்டப் பணிகள் தாமதமாகி வருவதால் படத்தின் ரிலீஸ் செய்தியை ஆயுத பூஜைக்கு தள்ளி வைக்க பட குழு முடிவு செய்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி வந்தது. ஆனால் தற்போது அந்த செய்தியை பொன்னியின் செல்வன் படக் குழு திட்டவட்டமாக மறுத்து இருக்கிறது.
பொன்னியின் செல்வன்- 2 படம் அறிவித்தபடி அதே தேதியில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்கள். அதோடு இந்த மாதம் இப்படத்தின் முதல் சிங்கிள் வெளியாகும் நிலையில், அடுத்த மாதம் முதல் வாரத்தில் டீசர், அதையடுத்து அடுத்த மாத இறுதியில் இசை வெளியீடு என அடுத்தடுத்து பிரமோசன் நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனராம்.