சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
"தப்புதாளங்கள்" படத்தில் பிரபலமான சுந்தர், "வைதேகி காத்திருந்தாள்" படத்தில் பிரபலமான பிரமிளா ஆகியோரின் மகள்தான் மேக்னா. "கிருஷ்ணலீலை" படத்தில் அறிமுகமானார். அந்தப் படம் இதுவரை வெளிவரவில்லை. அதன் பிறகு "காதல் சொல்ல வந்தேன்" படத்தில் நடித்தார். அதுவும் சரியாக ஓடவில்லை. அதனால் தமிழ் சரிப்பட்டு வராது என்று தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் சீரியசாக நடிக்க ஆரம்பித்தார். என்ன இருந்தாலும் அப்பாவும், அம்மாவும் புகழ்பெற்ற தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்காமல் விடக்கூடாது என்று உறுதி எடுத்தார். அதன்பலனாக தற்போது ஜெயம்ரவி நடிக்க சமுத்திரகனி இயக்கும் "நிமிர்ந்து நில்" படத்தில் நடித்து வருகிறார். பி.வாசு மகன் ஷக்தியுடன் நடித்த "கள்ளச்சிரிப்பழகா" ரிலீசாக வேண்டியது உள்ளது.
தமிழ் சினிமாவில் தான் வெற்றி பெற முடியாமல் போனதற்கு காரணம் என்ன என்று மூளையை கசக்கி யோசித்தவருக்கு ஒன்று புரிந்தது. அது தன்னை மற்றவர்களுடன் ஒப்பிட்டுக் கொண்டது. இவரை சிலர் ஒரு சாயலில் நயன்தாரா மாதிரி இருக்கீங்க, என்றும் இன்னொரு -குரூப் அசின் மாதிரி இருக்கீங்க என்ற ஐஸ் வைக்க அதை அப்படியே நம்பியதுதான் இதற்கு காரணம் என்று முடிவு செய்து, இனி என்னை யாரோடும் ஒப்பிடாதீங்க என்று ஸ்டேட்மெண்ட் விட்டிருக்கிறார்.
அவர் கூறியிருப்பதாவது: நான் யாருடைய சாயலில் தெரிந்தாலும் அது பார்ப்பவர்களின் பார்வையை பொருத்தது. நான் மேக்னாதான். தயவுசெய்து மற்ற ஹீரோயின்களுடன் என்னை ஒப்பிடாதீங்க. நான் நடிக்கும் படங்களில் என் அழகையும், நடிப்பையும் மேக்னாவாக பார்த்து விமர்சியுங்கள். என்று கூறியிருக்கிறார்.