பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் தனது 42வது படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இதையடுத்து அவர் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்கப் போகிறார். இந்தப் படத்தின் ஆரம்ப கட்டப் பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்ட நிலையில் தற்போது வாடிவாசல் படத்திற்கான கிராபிக்ஸ் காட்சிகளுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஹாலிவுட்டில் வெளியான காட்ஷில்லா, அவதார் போன்ற படங்களில் பணியாற்றிய டிஜிட்டல் நிறுவனமே இந்த வாடிவாசல் படத்திற்கும் கிராபிக்ஸ் காட்சிகளை உருவாக்கும் பணியில் தற்போது ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. தற்போது வெற்றி மாறன் விடுதலை படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டதால் இந்த வாடிவாசல் படத்திற்கான கிராபிக்ஸ் பணிகளில் ஈடுபட்டிருக்கிறாராம். அதனால் சூர்யா தனது 42வது படத்தின் படப்பிடிப்பை முடித்ததும் உடனடியாக வாடிவாசல் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளதாம். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தை எஸ். தாணு தயாரிக்கிறார்.