ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா |
அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட் அசோசியேஷன் என்பது நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் தந்தை ஒய்.ஜி.பார்த்தசாரதியால் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆகிறது. இந்த அமைப்போடு எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெயலலிதா, சோ, லட்சுமி உள்ளிட்ட பல கலைஞர்கள் பணியாற்றினார்கள். ஜெயலிதாவின் தயார் சந்தியா இந்த அமைப்பின் நிரந்தர நடிகையாக இருந்தார்.
இந்த அமைப்பு நடத்திய வியட்நாம் வீடு சுந்தரம், பரீட்சைக்கு நேரமாச்சு, கவுரம் போன்ற நாடகங்கள் திரைப்படங்களாக தயாரானது. அந்த வரிசையில் தற்போது ஒய்.ஜி.மகேந்திரன் நடித்து வரும் சாருகேசி நாடகமும் திரைப்படமாகிறது. இதனை அவரே இயக்குகிறார்.
அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு இசை கலைஞனின் வாழ்க்கையை சுற்றி கதை நடக்கிறது. இந்த நாடகத்தை திரைப்படமாக ஸ்ரீ அக்ரஹாரம் ராஜலக்ஷ்மி புரொடக்ஷன் தயாரிக்கவுள்ளது. இயக்குநர் வசந்த் எஸ்.சாய் இந்த படத்திற்கு திரைக்கதை அமைக்க உள்ளதோடு கிரியேட்டிவ் இயக்குநராகவும் பங்காற்ற உள்ளார். ஒய் ஜி மகேந்திரன் முதன்மை வேடத்தில் நடித்து, இயக்குகிறார். இதர நடிகர், நடிகைகள் மற்றும் படக்குழுவினர் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படுகிறது.
நாடகத்தின் 50வது காட்சியில் திரைப்படத்தின் பணியை ரஜினிகாந்த் கிளாப் அடித்து தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர் ஒரு திரைப்படத்திற்குரிய அத்தனை அம்சங்களும் இந்த நாடகத்தில் இருக்கிறது. அதனால் இந்த படம் வெற்றி பெறும் அதற்கு எனது வாழ்த்துகள். நாடகத்தில் நீண்ட வசனம் கொண்ட ஒரே ஷாட் வரும். அது அப்படியே படத்திலும் இடம் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.