ராம நவமியை முன்னிட்டு 'ஆதி புருஷ்' பட புதிய போஸ்டர் வெளியீடு | 200 சவரன் நகை கொள்ளை - புதிய புகார் அளித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! | மணிரத்னத்தின் மீதான வழக்கு தள்ளுபடி | ஸ்கை டைவிங்கில் அசத்திய அஞ்சு குரியன் | பிரதமரை சந்தித்த ஆஸ்கர் விருது வென்ற ‛தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்பட குழுவினர் | சமந்தா நடிப்பில் இருந்து ஓய்வு எடுக்கிறாரா? | மதுபான பிசினஸில் இறங்கிய ஷாரூக்கான் மகன் ஆரியன்கான்! | பொன்னியின் செல்வன் வெற்றியை தொடர்ந்து மருதநாயகத்தை தூசி தட்டும் கமல் | எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து சொன்ன அஜித்குமார் | தீண்டாமை பிரச்னையா : தியேட்டர் நிர்வாகம் விளக்கம் ; ஊழியர்கள் மீது வழக்குபதிவு |
முன்னாள் பிரதமர் இந்திரா காலக்கட்டத்தில் நிகழ்ந்த எமெர்ஜென்சி சம்பவத்தை மையமாக வைத்து எமெர்ஜென்சி என்ற பெயரில் படம் இயக்கி, அதில் இந்திரா வேடத்தில் நடித்தும் வருகிறார் ஹிந்தி நடிகை கங்கனா ரணாவத். இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
கங்கனா கூறுகையில், ‛‛எமெர்ஜென்சி படப்பிடிப்பு முடிந்துவிட்டது. என் வாழ்வில் பெருமையான தருணம் இது. இருந்தாலும் இந்த படம் துவங்கிய சமயத்தில் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டது. அதன்பின் இந்த படத்திற்காக என் மொத்த சொத்துக்களையும் அடமானம் வைத்தேன். இதை முன்பே சொன்னால் சிலர் கவலைப்படுவார்கள். என்னை வெறுப்பவர்கள் மகிழ்வர். நான் கஷ்டப்பட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் எனது வலி மூலம் கிடைக்கும் சந்தோஷத்தை கொடுக்க நான் விரும்பவில்லை. இப்போது சொல்ல காரணம் உங்கள் கனவுகள் நிறைவேற கடினமாக உழையுங்கள். நான் பாதுகாப்பாக உள்ளேன்'' என்றார்.