என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாரூக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம், அஷுதோஷ் ரானா, டிம்பிள் கபாடியா மற்றும் பலர் நடிக்கும் 'பதான்' ஹிந்திப் படம் நாளை(ஜன., 25) உலகம் முழுவதும் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு மொழிகளிலும் இப்படம் வெளியாக உள்ளது.
இப்படத்திற்கான முன்பதிவு கடந்த சில நாட்களாகவே பரபரப்பாக நடந்து வருகிறது. முன்பதிவாக மட்டும் ரூ.20 கோடிக்கு டிக்கெட் புக்கிங் நடந்துள்ளது. அதில் 30 சதவீதம் தென்னிந்தியாவில் புக்கிங் நடந்துள்ளது. இப்படத்தின் முதல் நாள் வசூல் சுமார் 50 கோடி வரை இருக்கும் என பாலிவுட்டினர் எதிர்பார்க்கின்றனர். இந்த வார இறுதி வசூலாக மட்டும் 200 கோடியைத் தாண்ட வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கிறார்கள்.
இந்தியாவில் மட்டும் 5000 மல்டிபிளக்ஸ் ஸ்கீரின்களில் இப்படம் வெளியாகிறது. அவற்றைத் தவிர்த்து சிங்கிள் ஸ்கீரின்களும் உண்டு. தென்னிந்தியாவின் முக்கிய நகரங்களான சென்னை, ஐதராபாத், பெங்களூரு ஆகிய நகரங்களில் இப்படத்திற்கான முன்பதிவு சிறப்பாக உள்ளதாகவும் தெரிவிக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு பாலிவுட் படத்திற்கு இந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்திருப்பது அவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
இப்படத்தின் வெற்றி அடுத்து அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான் நடித்து வெளிவர உள்ள 'ஜவான்' படத்திற்கு பெரும் பிளஸ் பாயின்டாக அமையப் போகிறது.