மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? |
பிரபல ஆவணப்பட மற்றும் திரைப்பட இயக்குனர் லீனா மணிமேகலை. அவர் தற்போது காளி என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டார். இதில் காளி உள்ளிட்ட சாமி வேடம் அணிந்திருப்பவர்கள் புகைபிடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது.
இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்து கடவுளை அவமதிக்கும் வகையில் போஸ்டர் வெளியிட்ட லீனா மணிமேகலையை கைது செய்ய வேண்டும் என சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டனர். டில்லி, உத்தரபிரதேசம், மற்றும் மத்திய பிரதேசத்தில் சமூக ஆர்வலர்களின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் லீனா மணிமேகலையை நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்குகளுக்கு எதிராக லீனா மணிமேகலை சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், இந்த வழக்குகளில் என்னை கைது செய்ய இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இது தொடர்பாக வழக்கை விசாரித்து வரும் நீதிமன்றங்கள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டதுடன் மறு உத்தரவு வரும் வரை லீனாவை கைது செய்யவும் இடைக்கால தடை விதித்தது.