'மாஸ்க்': வாய்ப்பில்லாத ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் வருமா? | 50 வருட திரையுலக பயணத்தில் இருந்து ஓய்வு பெறும் நடிகை துளசி | 'மெமரிஸ்' இரண்டாம் பாகம் ; பிரித்விராஜ் விருப்பம் | பட விளம்பர மோசடி ; பெண் உள்ளிட்ட ஐவர் மீது நடிகர் யஷ்ஷின் தாயார் போலீசில் புகார் | இரண்டு நாளில் ஒரு மில்லியன் பார்வைகளைத் தொட்ட மஞ்சு வாரியரின் குறும்படம் | மோகன்லால் மம்முட்டி படங்களை பயன்படுத்தியதால் 2 வருட தடை விதித்தனர் ; இயக்குனர் வினயன் | இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி |

சலார், ஆதிபுருஷ், புராஜெக்ட் கே போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார் பிரபாஸ். இதில் கேஜிஎப் படத்தின் இயக்குனரான பிரசாந்த் நீல் இயக்கத்தில் அவர் நடித்து வரும் சலார் படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. ஸ்ருதிஹாசன் நாயகியாக நடித்து வரும் இந்த படத்தின் சண்டைக் காட்சி ஒன்று தற்போது ஐதராபாத்தில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த இரவு ஆக்க்ஷன் காட்சியை குறைந்த வெளிச்சம் கொண்ட காட்சிகளாக படமாக்கி வருகிறார் பிரசாந்த் நீல். இந்த சண்டை காட்சி படமாக்கப்பட்டு முடிந்ததும் சலார் படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்து விடும் என்று படக்குழு அறிவித்திருக்கிறது . அதோடு இந்த ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி இந்த சலார் படம் திரைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.