நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் |
ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண் மற்றும் பலர் நடித்து கடந்தாண்டு வெளிவந்த தெலுங்குப் படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படத்தில் கீரவாணி இசையில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடலுக்கு கோல்டன் குளோப் விருது கிடைத்தது.
படக்குழுவினர் தொடர்ந்து சில விருது நிகழ்வுகளிலும் பங்கேற்றனர். அப்போது பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனை சந்தித்துள்ளனர். அந்த சந்திப்பு பற்றி இயக்குனர் ராஜமவுலி, “மிகச் சிறந்தவரான ஜேம்ஸ் கேமரூன் ஆர்ஆர்ஆர் படத்தைப் பார்த்துள்ளார். அவருக்கு படம் மிகவும் பிடித்ததால் மனைவியையும் படம் பார்க்க பரிந்துரை செய்து மனைவியுடன் மீண்டும் ஒரு முறை பார்க்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
சார், படத்தைப் பற்றி எங்களுடன் 10 நிமிடங்கள் அது குறித்து விவாதித்ததை மறக்க முடியாது. நீங்கள் சொன்னது போல நான் இந்த உலகத்தின் உச்சியில் நிற்கிறேன், உங்கள் இருவருக்கும் நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.