நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண் மற்றும் பலர் நடித்து கடந்தாண்டு வெளிவந்த தெலுங்குப் படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படத்தில் கீரவாணி இசையில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடலுக்கு கோல்டன் குளோப் விருது கிடைத்தது.
படக்குழுவினர் தொடர்ந்து சில விருது நிகழ்வுகளிலும் பங்கேற்றனர். அப்போது பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனை சந்தித்துள்ளனர். அந்த சந்திப்பு பற்றி இயக்குனர் ராஜமவுலி, “மிகச் சிறந்தவரான ஜேம்ஸ் கேமரூன் ஆர்ஆர்ஆர் படத்தைப் பார்த்துள்ளார். அவருக்கு படம் மிகவும் பிடித்ததால் மனைவியையும் படம் பார்க்க பரிந்துரை செய்து மனைவியுடன் மீண்டும் ஒரு முறை பார்க்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
சார், படத்தைப் பற்றி எங்களுடன் 10 நிமிடங்கள் அது குறித்து விவாதித்ததை மறக்க முடியாது. நீங்கள் சொன்னது போல நான் இந்த உலகத்தின் உச்சியில் நிற்கிறேன், உங்கள் இருவருக்கும் நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.