கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் | இதயக்கனி, திருப்பாச்சி, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் |
மலையாள திரையுலகில் ‛அங்கமாலி டைரிஸ்' என்கிற படத்தின் மூலம் இயக்குனராக புகழ் பெற்றவர் லிஜோ ஜோஸ் பெள்ளிசேரி. தொடர்ந்து இ மா யு, ஜல்லிக்கட்டு உள்ளிட்ட வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை இயக்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இந்த படங்களின் வெற்றியால் அடுத்ததாக மம்முட்டி தனது சொந்த தயாரிப்பில் தானே ஹீரோவாக நடிக்கும் நண்பகல் நேரத்து மயக்கம் என்கிற படத்தை இயக்கும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது. அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து இன்னும் சில தினங்களில் மலையாளம் மற்றும் தமிழ் என இரண்டு மொழிகளிலும் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக மோகன்லால் நடிப்பில் மலைக்கோட்டை வாலிபன் என்கிற படத்தை இயக்குவதற்கு தயாராகி வருகிறார் லிஜோ ஜோஸ். இந்தநிலையில் நடிகர் சூர்யாவுக்காக ஒரு கதையை தான் உருவாக்கியுள்ளதாகவும் சூர்யாவிடம் அதை கூறியபோது அவருக்கும் ரொம்பவே பிடித்துப்போய் இந்த கதையை நாம் செய்வோம் என கூறியதாகவும் ஒரு தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் லிஜோ ஜோஸ். அதேசமயம் சூர்யாவின் கைவசம் ஏற்கனவே உள்ள படங்கள் மற்றும் சில காரணங்களால் இந்த படம் தள்ளிப்போய்க் கொண்டிருப்பதாகவும் நிச்சயமாக விரைவில் சூர்யாவிடமிருந்து அழைப்பு வரும் என நம்புவதாகவும் கூறியுள்ளார் லிஜோ ஜோஸ் பெள்ளிசேரி