சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
இளையராஜாவின் அன்பு கட்டளைக்கு ஏற்ப அரைமணி நேரத்தில் பாட்டு பாடி கொடுத்து அசத்தி இருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். விஸ்வரூபம் பட பிரச்னையில் இருந்து மீண்டு படத்தின் வசூலால் திருப்தி அடைந்திருக்கும் கமல், அதே வேகத்தோடு விஸ்வரூபம் பார்ட்-2-வுக்கான ஆயத்த வேலைகளில் பிஸியாக இருக்கிறார். இந்நிலையில் பாலிவுட் இயக்குனர் பாவ்னா தல்வார், பங்கஜ் கபூரை வைத்து ஹேப்பி என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து வருகிறார். மறைந்த நகைச்சுவை கலைஞர் சார்லி சாப்ளினை கவுரவிக்கும் வகையில் இப்படத்தை இயக்குகிறார் பாவ்னா தல்வார்.
ஹேப்பி படத்தின் பாடல் பதிவை சென்னையில் நடத்தி வருகிறார் இளையராஜா. இப்படத்தின் பாடல் ஒன்றை பாட யாரை அழைப்பது என்று யோசித்த இளையராஜா, உடனடியாக தனது உதவியாளரிடம் கமலை வரச் சொல் என்று கூறியிருக்கிறார். அவரும் கமலுக்கு போன் செய்து விஷயத்தை சொல்லி இருக்கிறார். இளையராஜாவின் அழைப்பை ஏற்று ஒரு மணி நேரத்தில் ஸ்டுடியோவுக்கு வந்த கமல் அரைமணி நேரத்திலேயே பாட்டு பாடி கொடுத்துவிட்டார். பாடலும் உடனடியாக பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து கமல் கூறுகையில், சிவாஜி, பாலசந்தர், இளையராஜா போன்றவர்கள் என்னுடைய முன்மாதிரிகள், அவர்கள் எப்போது அழைத்தாலும் உடனே ஓடோடி வருவேன் என்று கூறியுள்ளார்.