ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
2017ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான நிஜன்டுகலுடே நாட்டில் ஓரிடவேளை என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்ய லட்சுமி. தொடர்ந்து மாயநதி, வரதன், பிரதர்ஸ் டே உள்ளிட்ட சில மலையாளப்படங்களில் நடித்தார். விஷால் நடிப்பில் வெளியான ஆக்ஷன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து ஜகமே தந்திரம், புத்தம்புது காலை விடியாதா, கார்கி, கேப்டன், பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி படங்களில் நடித்தார். இவற்றில் பொன்னியின் செல்வனும், கட்டா குஸ்தியும் அவருக்கு புகழை பெற்றுத் தந்தது.
இந்த நிலையில் ஐஸ்வர்ய லட்சுமி, தமிழில் கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களில் நடித்த அர்ஜூன் தாஸ் உடன் நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு அதனுடன் காதல் லோகோவான ஹாட்டினையும் வெளியிட்டிருந்தார். இதனால் இருவரும் காதலிப்பதாக தகவல்கள் பரவியது, ரசிகர்களும் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
இருவரும் இணைந்து ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. இருவரும் இணைந்து எங்கேயும் தோன்றியதில்லை. அப்படி இருக்கும்போது எப்படி காதலாகியிருக்க முடியும் என்ற சந்தேகம் சிலருக்கு இருந்தது. இது ஒருவேளை ஏதாவது ஒரு படத்தின் விளம்பர தந்திரமாக இருக்குமோ என்றும் கருதப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மாலையே ஐஸ்வர்யா இன்னொரு பதிவை வெளியிட்டார் அதில் “நண்பர்களே எனது பதிவு இவ்வளவு வைரலாகும் என எதிர்பார்க்கவில்லை. நாங்கள் சந்திந்த போது ஒரு படத்தை எடுத்து பதிவிட்டேன். நாங்கள் இருவரும் நண்பர்கள் தான். வதந்திகளில் கூறப்படுவது போல் எதுவும் இல்லை. நேற்று முதல் எனக்கு குறுஞ்செய்தி அனுப்பும் அர்ஜூன் தாஸ் ரசிகர்களுக்கு சொல்லிக்கொள்வது என்னவென்றால் "அவர் உங்களுடையவர்" என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.