இயக்குனர் கே.பாலசந்தர் பிறந்தநாள்: நன்றி மறந்தார்களா சினிமாகாரர்கள் | விமர்சனங்களைக் கண்டு கொள்ளாத சமந்தா | முதல் படத்துக்கு செல்ல பணமில்லை: நண்பனை நினைத்து கண்கலங்கிய இயக்குனர் | இயக்குனராக மிஷ்கின், ஹீரோவாக விஷ்ணுவிஷால், அப்பாவாக விஜயசாரதி, சித்தப்பாவாக கருணாகரன் | பான் இந்தியாவை பிரபலப்படுத்திய 'பாகுபலி' : 10 ஆண்டுகள் நிறைவு | 45 வயதில் நீச்சல் உடை போட்டோசெஷன்: மாளவிகா ஆசை நிறைவேறுமா? | தமிழ் சினிமாவில் 'பெய்டு விமர்சனங்கள்' அதிகம் : 96 இயக்குனர் பிரேம்குமார் குற்றச்சாட்டு | 22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? |
'நேரம், பிரேமம்' படம் மூலம் சினிமா ரசிகர்களைக் கவர்ந்த மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்தது பற்றி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “எனது வாழ்க்கையில் முதல் முறையாக சினிமாவின் மவுண்ட் எவரெஸ்ட் உலகநாயகன் கமல்ஹாசனை சந்தித்தேன். அவரது வாயிலிருந்து சினிமாவுக்கான ஐந்தாறு கதைகளைக் கேட்டேன். பத்து நிமிடத்திற்குள் எனது புத்தகத்தில் அது பற்றிய சிறு குறிப்புகளை எழுதிக் கொண்டேன். அவர் ஒரு மாஸ்டர் என்பதால் அவரது அனுபவங்களைப் பகிர்ந்தார். ஆனால், ஒரு மாணவனாக அவர் சொல்வதில் ஏதாவது விட்டுவிடுவேனோ என பயந்தேன். நம்பமுடியாத இந்த கனவான சந்திப்புக்காக இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.