கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு படம் வருகிற 11ம் தேதி தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தின் நாயகியாக மஞ்சு வாரியர் நடித்துள்ள நிலையில், ஒரு முக்கியத்துவம் வாய்ந்த போலீஸ் வேடத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி நடித்திருக்கிறார். அவர் அளித்த ஒரு பேட்டியில், ‛‛2003ம் ஆண்டு வெங்கட் பிரபுவை வைத்து உன்னை சரணடைந்தேன் என்ற படத்தை நான் இயக்கியிருந்தேன். அப்போது அஜித் என்னை அழைத்து பாராட்டு தெரிவித்தார். என்னுடைய அம்மாவின் பேட்டியை இணையதளத்தில் பார்த்த அஜித்குமார், அவரிடத்தில் ஆசி பெற்றார். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அஜித்குமார் எப்படி பழகினாரோ அப்படியே இப்போதும் பழகினார். இது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்தது. துணிவு படத்தில் நான் ஒரு இயக்குனர் என்பதை மறந்துவிட்டு வினோத் என்ன சொன்னாரோ அதை மட்டுமே செய்தேன். இந்த படத்தில் நான் ஒரு இயக்குனரின் நடிகராக தான் இருந்தேன். என்னை இப்படத்தில் முழுமையாக மாற்றிவிட்டார் வினோத். அந்த வகையில் துணிவு படத்தில் நான் நடித்துள்ள போலீஸ் ரோல் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்று தெரிவித்து இருக்கிறார் சமுத்திரக்கனி.