'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு படம் வருகிற 11ம் தேதி தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தின் நாயகியாக மஞ்சு வாரியர் நடித்துள்ள நிலையில், ஒரு முக்கியத்துவம் வாய்ந்த போலீஸ் வேடத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி நடித்திருக்கிறார். அவர் அளித்த ஒரு பேட்டியில், ‛‛2003ம் ஆண்டு வெங்கட் பிரபுவை வைத்து உன்னை சரணடைந்தேன் என்ற படத்தை நான் இயக்கியிருந்தேன். அப்போது அஜித் என்னை அழைத்து பாராட்டு தெரிவித்தார். என்னுடைய அம்மாவின் பேட்டியை இணையதளத்தில் பார்த்த அஜித்குமார், அவரிடத்தில் ஆசி பெற்றார். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அஜித்குமார் எப்படி பழகினாரோ அப்படியே இப்போதும் பழகினார். இது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்தது. துணிவு படத்தில் நான் ஒரு இயக்குனர் என்பதை மறந்துவிட்டு வினோத் என்ன சொன்னாரோ அதை மட்டுமே செய்தேன். இந்த படத்தில் நான் ஒரு இயக்குனரின் நடிகராக தான் இருந்தேன். என்னை இப்படத்தில் முழுமையாக மாற்றிவிட்டார் வினோத். அந்த வகையில் துணிவு படத்தில் நான் நடித்துள்ள போலீஸ் ரோல் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்று தெரிவித்து இருக்கிறார் சமுத்திரக்கனி.




