25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
தமிழகத்தைத் தவிர இதர தென்னிந்திய மாநில நகரங்களில் பெங்களூருவில்தான் அதிகமான தியேட்டர்களில் தமிழ்ப் படங்கள் வெளியாகும். இந்த வருட பொங்கலுக்கு வெளியாகும் 'வாரிசு, துணிவு' ஆகிய இரண்டு படங்களுமே அங்கு அதிக தியேட்டர்களில் வெளியாகின்றன. அவற்றிற்கான முன்பதிவுகளும் பரபரப்பாக நடந்து வருகின்றன.
அஜித் நடித்துள்ள 'துணிவு' படத்திற்கு அதிகாலை 2 மணிக்கு சிறப்புக் காட்சிகள் நடக்கின்றன. ரஜினிகாந்த்திற்குப் பிறகு அஜித் படத்திற்குத்தான் இவ்வளவு அதிகாலையில் சிறப்புக் காட்சிகள் நடக்கின்றதாம். அஜித் நடித்துள்ள ஒரு படத்திற்கு அதிகாலையில் காட்சி நடப்பது இதுதான் முதல் முறை என்பது கூடுதல் தகவல்.
இதுவரையிலும் லட்சுமி, கிருஷ்ணா, பாலாஜி, வைபவ், சீனிவாசா ஆகிய தியேட்டர்களில் 2 மணிக்கான காட்சிகளின் முன்பதிவு முழுவதுமாக முடிந்துவிட்டதாம். அதன் மூலம் மட்டுமே 20 லட்ச ரூபாய் வரையில் வசூலாகியுள்ளது என்கிறார்கள். அதிகாலை 3 மணிக்கும், 4 மணிக்கும் பல தியேட்டர்களில் காட்சிகளுக்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கர்நாடகாவில் மட்டும் 40க்கும் மேற்பட்ட சிங்கிள் தியேட்டர்களிலும், 50க்கும் மேற்பட்ட மல்டிபிளக்ஸ் தியேட்டர்களிலும் 'துணிவு' படம் வெளியாகிறது.