'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
ஜனவரி 11ம் தேதி விஜய் நடித்துள்ள 'வாரிசு', அஜித் நடித்துள்ள 'துணிவு' ஆகிய படங்கள் தியேட்டர்களில் வெளியாக உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான தியேட்டர்களில் இந்த இரண்டு படங்களும் வெளியாக உள்ளது.
பொதுவாக முன்னணி ஹீரோக்கள் நடிக்கும் படங்களுக்கு அதிகாலை 4 மணிக்கே சிறப்புக் காட்சிகள் நடைபெறுவது வழக்கம். ஆனால், 'வாரிசு, துணிவு' படங்களின் சிறப்புக் காட்சிகளை அதிகாலை 4 மணிக்கு நடத்த தியேட்டர்காரர்கள் தயக்கம் காட்டுவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. ஒரே சமயத்தில் இரண்டு படங்களையும் திரையிட்டால் தியேட்டர்களில் குவியும் அவர்களது தீவிர ரசிகர்களை கட்டுப்படுத்துவது சிரமம் என தியேட்டர்காரர்கள் நினைக்கிறார்களாம். மேலும், தியேட்டர்களில் ஏதாவது சேதம் ஏற்பட்டால் அது தங்களுக்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும் என்றும் கருதுகிறார்களாம்.
மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் திரையிட முடியும். ஆனால், சிங்கிள் ஸ்கிரீன்களில் எந்தக் காட்சியை யாருக்கு முதலில் தருவது என்ற குழப்பம் நிலவுகிறதாம். எனவே, தேவையற்ற மோதல்களை சமாளிக்கும் விதமாக காலை 8 மணி காட்சியிலிருந்து படத்தை ஆரம்பிக்கலாமா எனவும் யோசித்து வருகிறார்களாம். நாளை முதல் இரண்டு படங்களுக்கும் முன்பதிவு ஆரம்பமாக உள்ள நிலையில் அதிகாலை சிறப்புக் காட்சிகள் குறித்து ஓரிரு நாளில் முடிவு செய்வார்கள் எனத் தெரிகிறது.