கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

'கயல்' தொடர் மக்களுக்கு பேவரைட்டான சீரியலாக புகழ் பெற்றுள்ளது. இந்த தொடரில் சஞ்சீவ் மற்றும் சைத்ரா ரெட்டி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். தவிர மற்ற கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகர்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் கயல் தொடரை விட்டு நாயகன் சஞ்சீவ் கார்த்திக் விலகவுள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல் வெளியாகி வருகிறது.
இதுகுறித்து சஞ்சீவிடமே பலரும் கேட்க, சஞ்சீவும் ஊடகத்தில் வெளியான அந்த செய்தியை தனது ஸ்டோரியில் பகிர்ந்து 'இதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?' என்று ரசிகர்களிடமே கேள்வி கேட்டிருந்தார். இருப்பினும், சீரியலை விட்டு விலகுவது குறித்து எந்த விளக்கமும் அவர் கொடுக்கவில்லை. இதன்காரணமாக சஞ்சீவியின் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காகவும் காத்திருக்கின்றனர்.