இசை மட்டும் தான்... நடிக்க வர மாட்டேன்: அனிருத் | 'ராய் ராய் ரா ரா'- ராம் சரணின் அதிரடி நடனம் குறித்து சிரஞ்சீவி வியந்து வெளியிட்ட பதிவு! | நடிகர் ஹரிஷ் கல்யாண் - நர்மதா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது! | 44 அரசுப் பள்ளிகளுக்கு விஜய் தேவரகொண்டா உதவி | ரஜினி ஒரு வித்தைக்காரர் : சுராஜ் வெஞ்சரமூடு | மார்ச் 6ல் ஓடிடியில் 'வித் லவ்' | தெலுங்கிலும் ஒரு ‛கில்லர்' : எஸ்ஜே சூர்யா என்ன செய்ய போகிறார் | தனிப்பட்ட வாழ்க்கைக்கு கருத்து கூறுவது அநாகரிகம் : ஆரி | ‛தெறி' ரீமேக்கா ‛உஸ்தாத் பகத்சிங்' : இயக்குனர் பதில் | கலை நிகழ்ச்சி போல நடந்த சங்கீத் வைபவம் : விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நெகிழ்ச்சி |

'கயல்' தொடர் மக்களுக்கு பேவரைட்டான சீரியலாக புகழ் பெற்றுள்ளது. இந்த தொடரில் சஞ்சீவ் மற்றும் சைத்ரா ரெட்டி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். தவிர மற்ற கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகர்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் கயல் தொடரை விட்டு நாயகன் சஞ்சீவ் கார்த்திக் விலகவுள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல் வெளியாகி வருகிறது.
இதுகுறித்து சஞ்சீவிடமே பலரும் கேட்க, சஞ்சீவும் ஊடகத்தில் வெளியான அந்த செய்தியை தனது ஸ்டோரியில் பகிர்ந்து 'இதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?' என்று ரசிகர்களிடமே கேள்வி கேட்டிருந்தார். இருப்பினும், சீரியலை விட்டு விலகுவது குறித்து எந்த விளக்கமும் அவர் கொடுக்கவில்லை. இதன்காரணமாக சஞ்சீவியின் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காகவும் காத்திருக்கின்றனர்.




