10 நாட்களில் ரூ.25 கோடி வசூலைக் கடந்த ‛வித் லவ்' | மரகதநாணயம் 2 படம் தொடங்கியது | கில்லி மீண்டும் ரீ ரிலீஸ் ஆகிறது : மங்கத்தா சாதனையை முறியடிக்குமா? | இனி காமெடி படம் மட்டுமே...? இயக்குனர் பொன்ராம் முடிவு | சிவகார்த்திகேயனின் ‛சேயோன்' | பூவே உனக்காக படம் பிரசாந்த் நடிக்க வேண்டியதா? | இயக்குனர் விஜய்க்கு மறுவாழ்வு தருமா 'காதல்' | இப்ப வருமோ…எப்ப வருமோ….'ஜனநாயகன்' | இயக்குனர்கள் அடிமையாக இருக்கக் கூடாது : புது நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் ஆர்கே செல்வமணி பேச்சு | பா.ஜ., தலைவரின் பேச்சுக்கு திரிஷா கண்டனம் : வருத்தம் தெரிவித்த நயினார் நாகேந்திரன் |

'கயல்' தொடர் மக்களுக்கு பேவரைட்டான சீரியலாக புகழ் பெற்றுள்ளது. இந்த தொடரில் சஞ்சீவ் மற்றும் சைத்ரா ரெட்டி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். தவிர மற்ற கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகர்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் கயல் தொடரை விட்டு நாயகன் சஞ்சீவ் கார்த்திக் விலகவுள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல் வெளியாகி வருகிறது.
இதுகுறித்து சஞ்சீவிடமே பலரும் கேட்க, சஞ்சீவும் ஊடகத்தில் வெளியான அந்த செய்தியை தனது ஸ்டோரியில் பகிர்ந்து 'இதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?' என்று ரசிகர்களிடமே கேள்வி கேட்டிருந்தார். இருப்பினும், சீரியலை விட்டு விலகுவது குறித்து எந்த விளக்கமும் அவர் கொடுக்கவில்லை. இதன்காரணமாக சஞ்சீவியின் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காகவும் காத்திருக்கின்றனர்.




