ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் |
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும் வங்கி கடனுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம். முன்பு நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்ட சிவாஜி தலைவராக இருந்தபோது வங்கியில் கடன் பெறப்பட்டது. இந்த கடனை நீண்ட காலம் திருப்பிச் செலுத்த முடியாத நிலை இருந்தது. பின்னர் விஜயகாந்த் தலைவரான பிறகு கலை நிகழ்ச்சி நடத்தி நடிகர் சங்க கடனை அடைத்தார்.
நாசர் தலைவரான பிறகு வங்கி கடன் பெறாமலேயே நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்படும் என்று அறிவித்தார். அது சிறப்பான தொடக்கமாகவும் அமைந்தது. அதன்பிறகு நடந்த நிர்வாக மாற்றம், ஆட்சி மாற்றம், வழக்குகள், உள் குழப்பங்களால் 70 சதவிகித பணிகளோடு கட்டிடம் நின்று போனது.
தற்போது நாசர் மீண்டும் தலைவராகி இருக்கும் நிலையில் கட்டிட பணிகளை தொடங்க நிதி வசதி இல்லை. இதனால் சங்கத்தின் சார்பில் வங்கியில் கடன் பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் 30 கோடி கடன்பெற தலைவர் நாசரும், துணை தலைவர் பூச்சி முருகனும் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளனர். கடன் கிடைத்ததும் 6 மாதத்தில் கட்டிடத்தை கட்டி முடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.