'லஸ்ட் ஸ்டோரிஸ் 2' படத்தின் டீசர் வெளியானது! | 'டிஜே டில்லு 2' படத்தின் ரிலீஸ் தேதி இதோ! | திமுக ஸ்டிக்கர் ஒட்ட பார்க்கும் உதயநிதி: நடிகை கஸ்தூரி கடும் விமர்சனம் | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த பிரபாஸ்! | குடும்பத்துடன் மலேசியாவுக்கு டூர் சென்ற ஐஸ்வர்யா ராஜேஷ்! | இளையராஜாவின் காலில் விழுந்து ஆசி பெற்ற அண்ணாமலை! | சுனைனாவின் ரெஜினா டிரைலர் வெளியானது! | தியேட்டர்களில் அனுமனுக்கு ஒரு 'சீட்' ஒதுக்கீடு: ஆதிபுருஷ் படக்குழு அறிவிப்பு | இந்தியன்-2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா?: ரகசியம் காக்கும் படக்குழு | அஜித்துக்கு வில்லனாகும் அர்ஜூன் தாஸ்? |
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும் வங்கி கடனுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம். முன்பு நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்ட சிவாஜி தலைவராக இருந்தபோது வங்கியில் கடன் பெறப்பட்டது. இந்த கடனை நீண்ட காலம் திருப்பிச் செலுத்த முடியாத நிலை இருந்தது. பின்னர் விஜயகாந்த் தலைவரான பிறகு கலை நிகழ்ச்சி நடத்தி நடிகர் சங்க கடனை அடைத்தார்.
நாசர் தலைவரான பிறகு வங்கி கடன் பெறாமலேயே நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்படும் என்று அறிவித்தார். அது சிறப்பான தொடக்கமாகவும் அமைந்தது. அதன்பிறகு நடந்த நிர்வாக மாற்றம், ஆட்சி மாற்றம், வழக்குகள், உள் குழப்பங்களால் 70 சதவிகித பணிகளோடு கட்டிடம் நின்று போனது.
தற்போது நாசர் மீண்டும் தலைவராகி இருக்கும் நிலையில் கட்டிட பணிகளை தொடங்க நிதி வசதி இல்லை. இதனால் சங்கத்தின் சார்பில் வங்கியில் கடன் பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் 30 கோடி கடன்பெற தலைவர் நாசரும், துணை தலைவர் பூச்சி முருகனும் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளனர். கடன் கிடைத்ததும் 6 மாதத்தில் கட்டிடத்தை கட்டி முடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.