மார்ஷல் படத்தில் வில்லன் யார்... | கருப்பு படத்தில் நடிக்க மறுத்த சிம்பு.? | ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ‛தமா': தீபாவளிக்கு ரிலீசாகிறது | ஒரே மாதத்தில் கோட்டா சீனிவாசராவின் மனைவியும் மறைந்தார்! | சிக்கந்தர் தோல்வி: சல்மான்கான் மீது நேரடியாக குற்றம் சாட்டிய ஏ.ஆர்.முருகதாஸ்! | நெகட்டிவ் விமர்சனங்களால் ‛கூலி' வசூல் பாதிப்பா? திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | ஆபரேஷன் சிந்தூரில் வீர மரணம் அடைந்த முரளி நாயக் வாழ்க்கை சினிமாவாகிறது | அதிக வசூல் இயக்குனர்களில் முதலிடத்தில் லோகேஷ் கனகராஜ் | ஹீரோயின் ஆகும் ஆசை இல்லை: 'கூலி' மோனிகா பிளெஸ்சி | 'கேப்டன் பிரபாகரன்' படத்திற்காக வீரப்பனை சந்தித்தேன்: ஆர்.கே.செல்வமணி |
பிரசாந்த் நீல் இயக்கத்தில் கன்னட நடிகர் யஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களும் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது. குறிப்பாக, கேஜிஎப் -2 படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை செய்தது. இந்த நிலையில் தற்போது பிரபாஸ் நடித்து வரும் சலார் படத்தை இயக்கி வரும் பிரசாந்த் நீல் அந்த படத்தை முடித்ததும் கேஜிஎப்-3 படத்தை தொடங்கப் போவதாக சமீபத்தில் அப்படத்தின் தயாரிப்பாளர் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது கேஜிஎப் படத்தின் நாயகன் யஷை இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா மற்றும் அவரது சகோதரர் குர்ணால் பாண்ட்யா ஆகியோர் சந்தித்துள்ளனர். இந்த போட்டோவை பகிர்ந்து கேஜிஎப் 3 என்று குறிப்பிட்டுள்ளனர். அதையடுத்து இந்த இரண்டு கிரிக்கெட் வீரர்களும் கேஜிஎப் திரைப்படத்தில் நடிக்கிறார்களா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.