ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரசாந்த் நீல் இயக்கத்தில் கன்னட நடிகர் யஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களும் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது. குறிப்பாக, கேஜிஎப் -2 படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை செய்தது. இந்த நிலையில் தற்போது பிரபாஸ் நடித்து வரும் சலார் படத்தை இயக்கி வரும் பிரசாந்த் நீல் அந்த படத்தை முடித்ததும் கேஜிஎப்-3 படத்தை தொடங்கப் போவதாக சமீபத்தில் அப்படத்தின் தயாரிப்பாளர் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது கேஜிஎப் படத்தின் நாயகன் யஷை இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா மற்றும் அவரது சகோதரர் குர்ணால் பாண்ட்யா ஆகியோர் சந்தித்துள்ளனர். இந்த போட்டோவை பகிர்ந்து கேஜிஎப் 3 என்று குறிப்பிட்டுள்ளனர். அதையடுத்து இந்த இரண்டு கிரிக்கெட் வீரர்களும் கேஜிஎப் திரைப்படத்தில் நடிக்கிறார்களா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.