மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா | ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன் மீண்டும் இணைந்தனர் |

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா. தமிழில் விஜய் உடன் இவர் நடித்துள்ள வாரிசு படம் பொங்கலுக்கு வெளியாகிறது. தற்போது ஹிந்தியிலும் நடித்து வரும் இவர், சித்தார்த் மல்கோத்ரா உடன் இணைந்து மிஷன் மஜ்னு என்ற படத்தில் நடித்துள்ளார்.
இப்பட விழாவில் பேசிய ராஷ்மிகா : பாலிவுட்டில் தான் நிறைய ரொமான்ட்டிக் பாடல்கள் வருகின்றன. தென்னிந்தியாவில் மசாலா மற்றும் ஐட்டம் பாடல்கள் தான் அதிகம் வருகின்றன. ஹிந்தியில் எனது முதல் ரொமான்ட்டிக் பாடல். இதை காண ஆவலாய் உள்ளேன் என்றார்.
ஹிந்தியில் இவரின் முதல் ரொமான்ட்டிக் பாடல் என்பதற்காக தென்னிந்திய சினிமா பாடல்களை இப்படி பேசுவதா என கூறி இவரின் இந்த கருத்திற்கு தென்னிந்திய ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இடத்திற்கு, நேரத்திற்கு தகுந்தார் போல் இவர் பேசுகிறார் என வசை பாடுகின்றனர்.
சமீபத்தில் கன்னட திரையுலகத்தை புறக்கணிக்கும் விதமாக இவர் பேசியதாக சர்ச்சை எழுந்த நிலையில் இப்போது இந்த சர்ச்சையில் சிக்கி உள்ளார்.