நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

எங்கேயும் எப்போதும் பட புகழ் சரவணன் இயக்கத்தில் திரிஷா கதையின் நாயகியாக நடித்துள்ள படம் ‛ராங்கி'. அதிரடி ஆக் ஷன் கலந்த கதையில் இந்த படம் உருவாகி உள்ளது. படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடந்துள்ளது. இதில் அந்நாட்டை சேர்ந்த ஆலிம் என்ற இளைஞனை கண்டுபிடித்து நடிக்க வைத்துள்ளார் சரவணன்.
சோஷியல் மீடியா மூலம் பழகும் பழக்கத்தில் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் எதில் போய் முடிகிறது என்று பரபரப்பாக நகரும் முருகதாஸ் எழுதிய கதையை சரவணன் இயக்கி உள்ளார். இன்றைய காலத்தில் சமூகதுக்கு தேவையான மெசேஜ் ஒன்றையும் இந்த படத்தில் சொல்லி உள்ளனர். படத்தில் திரிஷாவின் நடிப்பிற்கு பின் ஆலிமின் நடிப்பு பேசப்படும் என்கிறார்கள் படக்குழுவினர். அந்தளவுக்கு, லவ், எமோஷன் என சிறப்பாக அவர் நடித்துள்ளாராம். நாளை(டிச., 30) வெள்ளியன்று படம் வெளியாகிறது.