'ராய் ராய் ரா ரா'- ராம் சரணின் அதிரடி நடனம் குறித்து சிரஞ்சீவி வியந்து வெளியிட்ட பதிவு! | நடிகர் ஹரிஷ் கல்யாண் - நர்மதா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது! | 44 அரசுப் பள்ளிகளுக்கு விஜய் தேவரகொண்டா உதவி | ரஜினி ஒரு வித்தைக்காரர் : சுராஜ் வெஞ்சரமூடு | மார்ச் 6ல் ஓடிடியில் 'வித் லவ்' | தெலுங்கிலும் ஒரு ‛கில்லர்' : எஸ்ஜே சூர்யா என்ன செய்ய போகிறார் | தனிப்பட்ட வாழ்க்கைக்கு கருத்து கூறுவது அநாகரிகம் : ஆரி | ‛தெறி' ரீமேக்கா ‛உஸ்தாத் பகத்சிங்' : இயக்குனர் பதில் | கலை நிகழ்ச்சி போல நடந்த சங்கீத் வைபவம் : விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நெகிழ்ச்சி | 'தாய்கிழவி' 22 கோடி.. 'வித் லவ்' 35 கோடி |

டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள், கோப்ரா போன்ற படங்களை இயக்கியவர் அஜய் ஞானமுத்து. தற்போது தனது முதல் படமான டிமான்டி காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை மீண்டும் அருள்நிதியை நாயகனாக வைத்து இயக்கி வருகிறார். பிரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது.
இந்நிலையில் டிமான்டி காலனி 2 படம் குறித்து அஜய் ஞானமுத்து வெளியிட்டுள்ள செய்தியில், தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு 40 சதவீதம் முடிவடைந்துள்ளது. இந்த படப்பிடிப்பில் முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகள் படமாக்கப்பட்டு அனைத்து காட்சிகளுமே தனக்கு திருப்தியாக இருப்பதாக தெரிவித்திருப்பவர், படக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். டிமான்டி காலனி படத்தின் முதல் பாகத்தைப்ப்போலவே இந்த இரண்டாம் பாகமும் திரில்லர் கதையில் உருவாகி வருகிறது.




