பிளாஷ்பேக் : அநேக புதுமைகள் படைத்த “ஆயிரத்தில் ஒருவன்” | முதல் முறையாக இணையும் ரவி மோகன், எஸ்.ஜே. சூர்யா! | ரீ ரிலீஸ் ஆகும் விஜய்யின் குஷி, சிவகாசி | 'குபேரா' இயக்குனருக்கு பேனா பரிசளித்த சிரஞ்சீவி | 'மாமன்' படத்தில் சுவாசிகா, பால சரவணனின் நடிப்பு: சூரி வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | சசிகுமாரின் 'பிரீடம்' படத்தின் டீசர் வெளியானது! | பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு கர்மாவும், கடவுளும் பதிலடி கொடுக்கட்டும்! - பாடகி சின்மயி | ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை திருமணத்திற்கு அழைத்த நாகார்ஜுனா | விஜய் நடித்த 'லியோ' படப் பாடல் படப்பிடிப்பு: 35 லட்சம் முறைகேடு புகார் | நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தயாரிப்பில் பிரபல நிறுவனம் |
டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள், கோப்ரா போன்ற படங்களை இயக்கியவர் அஜய் ஞானமுத்து. தற்போது தனது முதல் படமான டிமான்டி காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை மீண்டும் அருள்நிதியை நாயகனாக வைத்து இயக்கி வருகிறார். பிரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது.
இந்நிலையில் டிமான்டி காலனி 2 படம் குறித்து அஜய் ஞானமுத்து வெளியிட்டுள்ள செய்தியில், தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு 40 சதவீதம் முடிவடைந்துள்ளது. இந்த படப்பிடிப்பில் முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகள் படமாக்கப்பட்டு அனைத்து காட்சிகளுமே தனக்கு திருப்தியாக இருப்பதாக தெரிவித்திருப்பவர், படக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். டிமான்டி காலனி படத்தின் முதல் பாகத்தைப்ப்போலவே இந்த இரண்டாம் பாகமும் திரில்லர் கதையில் உருவாகி வருகிறது.