ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சமீபத்தில் வெளியான லவ்டுடே படம் மூலம் பரபரப்பாக பேசப்பட்டவர் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். இவரது இயக்கத்தில் முதல் படமாக உருவான கோமாளி படத்தில் ஜெயம் ரவி உடன் நடித்திருந்த கதாநாயகிகளில் ஒருவர் கன்னட நடிகை சம்யுக்தா ஹெக்டே. ஜெயம்ரவியுடன் பள்ளிப்பருவ காட்சிகளில் இணைந்து நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்ற இவர் அதன்பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மன்மதலீலை படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக அறிமுகமான கிரிக் பார்ட்டி படத்தில் தான் இவரும் கதாநாயகியாக அறிமுகமானார் என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
சினிமாவை தவிர்த்து நீச்சலில் மிகுந்த ஆர்வம் கொண்ட சம்யுக்தா ஹெக்டே தற்போது ஆழ்கடலில் டைவிங் செய்து அதற்கான சான்றிதழும் பெற்றுள்ளார். இதுகுறித்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ள அவர், “2017ல் இருந்து டைவிங் பழகி வருகிறேன். 2019லேயே ஆழ்கடல் டைவிங்கில் முதல் சான்றிதழை பெற்று விட்டேன். தற்போது அதன் இரண்டாம் நிலையில் வெற்றி பெற்றுள்ளேன். பகலிலும் சரி இரவிலும் சரி கடலில் 100 அடி ஆழத்திற்கு மேல் செல்லும்போது ஏற்படும் அந்த அனுபவத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை. பின்னாளில் நான் வயதாகும்போது சொல்வதற்கு எனக்காக நிறைய கதைகள் சேர்த்து வைத்துள்ளேன்” என்று கூறியுள்ளார் சம்யுதா ஹெக்டே.