'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |

வடிவேலு நடித்த நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படம் சமீபத்தில் வெளிவந்தது. இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. சமூக வலைத்தளங்களில் படம் ட்ரோல் செய்யப்பட்டது. இந்த நிலையில் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வந்த வடிவேலு சாமி தரிசனத்திற்கு பிறகு பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:
செந்தில் வேல்முருகனை தரிசிக்க வந்தது மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது. மனதில் கஷ்டம் இருந்தால் திருச்செந்தூர் முருகனை வணங்கும்போது, உங்க கஷ்டமெல்லாம் தீரும். உங்க குறையெல்லாம் தீரும். எல்லா வளமும் பெற்று நல்லா இருப்போம். 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' படம் மிகவும் நன்றாக வந்துள்ளது. மக்கள் அதைப்பார்த்து குலுங்கி குலுங்கி சிரிக்கிறார்கள். குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்.
படம் பார்த்தவர்கள் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து சொல்கிறார்கள். பெரிய வெற்றிப்படமாகியிருப்பதால் தயாரிப்பாளர்கள் சந்தோஷமாக உள்ளனர். அடுத்து நான் நடிக்கும் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள மாமன்னன் நல்ல கதை உள்ள படம். இது மக்களுக்கு பிடித்த படமாக அமையும். சந்திரமுகி 2 படத்திலும் நடிக்கிறேன். நான் மீண்டும் திரைக்கு வந்ததை ரசிகர்கள் சந்தோஷமா ரசிக்கிறாங்க. இது கடவுளுடைய ஆசீர்வாதம். என்றார்.




