'இந்தியன் 2' தீபாவளிக்கு வெளியிட திட்டம் | கீழடி தொல்லியல் அருங்காட்சியகத்தை பார்வையிட்ட சூர்யா குடும்பத்தினர் | 'பொன்னியின் செல்வன் 2' டிரைலர் எப்படிப்பட்ட வரவேற்பு கிடைத்துள்ளது ? | இளையராஜாவை சந்தித்து நன்றி சொன்ன வெற்றிமாறன் | 'பத்து தல' வெற்றியைக் கொண்டாடிய படக்குழு | விடுதலை படக்குழுவினருக்கு தங்க நாணயம் தந்த வெற்றிமாறன் | பாலாவின் வணங்கான் அடுத்தகட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலையில் துவங்குகிறது | முகேஷ் அம்பானி வீட்டு கலாச்சார நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் | பாரதிராஜா நடிப்பில் மனோஜ் இயக்கும் மார்கழி திங்கள் | 'பத்து தல'யை தடுமாற வைக்கும் 'விடுதலை' |
வடிவேலு நடித்த நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படம் சமீபத்தில் வெளிவந்தது. இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. சமூக வலைத்தளங்களில் படம் ட்ரோல் செய்யப்பட்டது. இந்த நிலையில் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வந்த வடிவேலு சாமி தரிசனத்திற்கு பிறகு பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:
செந்தில் வேல்முருகனை தரிசிக்க வந்தது மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது. மனதில் கஷ்டம் இருந்தால் திருச்செந்தூர் முருகனை வணங்கும்போது, உங்க கஷ்டமெல்லாம் தீரும். உங்க குறையெல்லாம் தீரும். எல்லா வளமும் பெற்று நல்லா இருப்போம். 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' படம் மிகவும் நன்றாக வந்துள்ளது. மக்கள் அதைப்பார்த்து குலுங்கி குலுங்கி சிரிக்கிறார்கள். குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்.
படம் பார்த்தவர்கள் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து சொல்கிறார்கள். பெரிய வெற்றிப்படமாகியிருப்பதால் தயாரிப்பாளர்கள் சந்தோஷமாக உள்ளனர். அடுத்து நான் நடிக்கும் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள மாமன்னன் நல்ல கதை உள்ள படம். இது மக்களுக்கு பிடித்த படமாக அமையும். சந்திரமுகி 2 படத்திலும் நடிக்கிறேன். நான் மீண்டும் திரைக்கு வந்ததை ரசிகர்கள் சந்தோஷமா ரசிக்கிறாங்க. இது கடவுளுடைய ஆசீர்வாதம். என்றார்.