தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விஜய்சேதுபதியின் பரம ரசிகரான புகைப்பட கலைஞர் எல்.ராமச்சந்திரன் இதற்கு முன்பு ஹூயூமன், கலைஞன் என்ற தலைப்பின் கீழ் விஜய்சேதுபதி காலண்டரை வெளியிட்டார். இதற்காக தனியாக விஜய்சேதுபதியை வைத்து போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இந்த ஆண்டு 'தி ஆர்ட்டிஸ்' என்ற பெயரில் காலண்டரை உருவாக்கி உள்ளார்.
இந்த காலண்டருக்கு ஓவியர் சிற்பி ஓவியம் தீட்டி உள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் சுமார் பத்து நாட்களுக்கும் மேலாக 12 செட்டுகளை, ஒவ்வொன்றையும் தனித்துவமான வடிவமைத்துள்ளனர். இது குறித்து புகைப்பட கலைஞர் எல்.ராமச்சந்திரன் கூறும்போது “கலையும் கற்பனையும், பல சமூக மாற்றங்களை நிகழ்த்தியுள்ளது; பல முன்னெடுப்புகளுக்கு ஆதாரமாய் இருந்துள்ளது; பலரையும் மகிழ்வித்து வருகிறது; அவ்வாறான எல்லா கலைஞர்களுக்கும் இந்த ஆர்டிஸ்ட் சமர்ப்பணம். பணிச்சுமைகளுக்கு மத்தியிலும் இதற்காக நேரம் கொடுத்த விஜய் சேதுபதிக்கு தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தன்னுடைய பணிகளில் முழு அர்ப்பணிப்புடனும் தன்னம்பிக்கையுடனும் செயலாற்றும் நடிகர்களில் விஜய் சேதுபதிக்கு என்றுமே ஒரு தனி இடம் உண்டு. இந்த படத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு தலைப்பிற்கும், அந்தந்த துறை சார்ந்த நிபுணர்களை அணுகி, அதன் நுணுக்கங்களை உள்வாங்கி, அந்தந்த கதாபாத்திரமாகவே தன்னை மாற்றியிருக்கிறார். இதன் மூலம் கிடைக்கும் பணம் காசா அறக்கட்டளை மூலம் கல்வி மற்றும் மருத்துவ நலன்களுக்காக பயன்படுத்தப்படும்” என்கிறார்.